செங்கோட்டை-புனலூர் 106 ஆண்டு மலை ரயில் 20ம் தேதியுடன் நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

Train
செங்கோட்டை: செங்கோட்டை-புனலுர் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக 106 ஆண்டுகள் இயங்கிக் கொண்டிருந்த மீட்டர்கேஜ் ரயில் வரும் 20-ம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.

1904-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பயணிகள் ரயில் கொல்லத்தில் இருந்து இயக்கப்பட்டது. இத்தடத்தில் தற்போது கொல்லம்-புனலுர் இடையே அகல ரயில் இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் பாதை முழுமையாக அகலப் பாதையாக மாற்றப்படவுள்ளதால் ரயிலை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

59 கிலோ மீட்டர் கொண்ட செங்கோட்டை-புனலூர் இடையே 100 சிறுபாலங்கள், 3 பெரிய பாலங்கள், 5 குகைகள் போன்றவைகள் உள்ளன.

வழக்கமாக ஒரு ரயில் சேவையை நிறுத்தினால் நஷ்டம்தான் ஏற்படும். ஆனால், தினமும் பல ஆயிரம் ரூபாய் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த இந்த ரயில் சேவையை நிறுத்துவதால் ரயில்வேக்கு நஷ்டமல்ல மாறாக லாபம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+