For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

119. பசப்புறு பருவரல்

By Staff
Google Oneindia Tamil News

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.

(1181)

விளக்கம்:

என்னை விரும்பிய காதலரின் பிரிவுக்கு அந்நாளிலே உடன்பட்ட யான், இப்பொழுது பசந்த என் இயல்பை யாருக்குச் சென்றுஎடுத்துச் சொல்வேன்.


அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

(1182)

விளக்கம்:

அவர் தந்தார் என்னும் உரிமையினாலே, இப் பசப்புத் தானும் என் உடலின் மேல் உரிமையோடு பற்றிப் படர்ந்து மேனி எங்கும்நிறைகின்றதே.


சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.

(1183)

விளக்கம்:

என் அழகையும், நாணத்தையும் அவர் தம்மோடு எடுத்துக் கொண்டார். அதற்கு கைம்மாறாக காம நோயையும் பசலையையும்எனக்கு தந்துள்ளார்.


உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர் திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

(1184)

விளக்கம்:

அவரையே யான் நினைத்திருப்பேன்; அவர் திறங்களைப் பற்றியே பேசுவேன்; அவ்வாறாகவும், பசலையும் வந்து படர்ந்ததுதான்பெரிய வஞ்சனையாய் இருக்கின்றது.


உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

(1185)

விளக்கம்:

அதோ பார் என் காதலர் என்னை பிரிந்து போகின்றார் ; இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையானது பற்றிபடருகின்றது.


விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

(1186)

விளக்கம்:

விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக்காத்திருக்கும் இருளைப் போல, என் தலைவனுடைய தழுவலின் முடிவைப்பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.


புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

(1187)

விளக்கம்:

தலைவனை தழுவிய படியே கிடந்தேன் ; பக்கத்தில் சிறிது புரண்டேன் ; அந்தப் பிரிவுக்கே பசலையும் அள்ளிக்கொள்வது போல,என்மீது மிகுதியாக பரவி விட்டதே.


பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

(1188)

விளக்கம்:

இவள் பசந்தாள் என்று என்னைப் பழித்து பேசுவது அல்லாமல், இவளைக் காதலர் விட்டு பிரிந்தார் என்று பேசுபவர் யாரும்இல்லையே.


பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

(1189)

விளக்கம்:

பிரிவுக்கு உடன்படச்செய்த காதலர், நல்ல நிலையினர் ஆவார் என்றால், என்னுடைய மேனியும் உள்ள படியே பசலை நோயினைஅடைவதாக.


பசப்பெனப் பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

(1190)

விளக்கம்:

பிரிவுக்கு உடன்படச் செய்து பிரிந்து போனவர், நமக்கு அருள் செய்யாதது பற்றித் தூற்றார் என்றால், யான் பசந்தேன் என்று பேர்பெறுவதும் நல்லதேயாகும்.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X