For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

21. தீவினை அச்சம்

By Staff
Google Oneindia Tamil News

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

(201)

விளக்கம்:

தீய செயலைச் செய்தலாகிய இறுமாப்பைத் தீவினையாளர்கள் அஞ்ச மாட்டார்கள் ; ஆனால், மேலோர்கள் தீயவைகளைச் செய்வதற்கு அஞ்சுவார்கள்.


தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்.

(202)

விளக்கம்:

தீயசெயல்கள் பிறர்க்கும் தமக்கம் தீமை விளைவித்தால், தீய செயல்களைத் தீயினும் கொடியதாகச் சான்றோர் நினைத்து அஞ்சுவார்கள்.


அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

(203)

விளக்கம்:

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

(204)

விளக்கம்:

பிறனுக்கு கேடு செய்வதனைப் பற்றி மறந்தும் நினைக்கக் கூடாது ; நினைத்தால் அப்படி நினைத்தவனுக்கு கேடு செய்ய அறமே நினைக்கும்.


இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து.

(205)

விளக்கம்:

'இவன் துணையிலன் ' என்று ஒருவனுக்குத் தீமையைச் செய்யாதிருக்க வேண்டும். செய்தால், மீண்டும் இவனே யாதும் துணை இல்லாதவன் ஆவான்.


தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல் வேண்டா தான்.

(206)

விளக்கம்:

துன்பம் தருவனவான தீவினைகள் தன்னைத் தொடர்ந்து வருத்துதலை விரும்பாதவன். தீய செயல்களைத் தான் பிறரிடம் ஒரு போதும் செய்யாதிருப்பானாக.


எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

(207)

விளக்கம்:

எத்தகைய பகைமை உடையவரும் தப்பிப் பிழைப்பர்; தீவினையாகிய பகையோ, ஒருவனை விடாமல் பின்பற்றிச் சென்று துன்பத்தைச் செய்யும்.


தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று.

(208)

விளக்கம்:

தீய செயல்களைச் செய்தவர் கெடுதல் உறுதி என்பது, நிழல் தன்னை விடாமல் வந்து தன் காலடியிலேயே தங்கி இருத்தலைப் போன்றதாகும்.


தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துள்ளற்க அடிஉறைந்து அற்று.

(209)

விளக்கம்:

ஒருவன், தன்னைத் தான் விரும்பி வாழ்பவனானால், அவன் எத்தகையதொரு தீய செயல்களிலும் ஒரு போதுமே ஈடுபடாமல் இருப்பானாக.


அருங்கேடன் என்பது அறிக மருங்குஓடித்
தீவினை செய்யான் எனின்.

(210)

விளக்கம்:

ஒருவன், தவறான வழியில் சென்று தீய செயல்களைச் செய்யாதிருப்பானானால், அவன் கேடற்றவன் ஆவான் என்று தெளிவாக அறியலாம்.

Previous

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X