தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழா - வானத்தில் வட்டமிட்டு ஆசி கொடுத்த கருடபகவான்
ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது கோபுர கலசத்திற்கு மேலே கருடபகவான் வட்டமடிப்பது வழக்கம். அதை தரிசித்த பின்னர்தான் கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்வார்கள்.
தஞ்சாவூர்: பெரியகோவில் கும்பாபிஷேகம் தமிழில் திருமறைகள் ஒலிக்க கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. யாகசாலை பூஜைகள் முடிந்து கலச தீர்த்தங்கள் கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட சில நிமிடங்களில் ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு ஆசி வழங்கியது. அதனைக் கட்ட பக்தர்களும் சிவனடியார்களும் பரவசமடைந்தனர். புனித தீர்த்தங்களை கோபுர கலசங்களின் மீது ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது கோபுர கலசத்திற்கு மேலே கருடபகவான் வட்டமடிப்பது வழக்கம். அதை தரிசித்த பின்னர்தான் கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்வார்கள். அதனை நல்ல சகுனம் என்றே பக்தர்கள் கருதுகின்றனர்.
விஷ்ணுவின் அம்சம் கருடன். கருட தரிசனம் பார்ப்பது நல்ல சகுனம் என்பார்கள். கருடனைத் தரிசிக்கும்போது நம்முடைய மனம் நிறைவடைகிறது. நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் கும்பாபிஷேகம் நடந்தாலும் அந்த நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்கள்.

கருடாழ்வார்
கருடாழ்வார், மகா பலம் உடையவர். கச்யபர் - விநதை தம்பதிக்கு இரண்டாவது மகனாக ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் கருடாழ்வார். இவருக்கு மங்களாலயன், பக்ஷிராஜன், சுபர்ணன், புஷ்பப்பிரியன், வினதைச் சிறுவன், வேதஸ்வரூபன், வைனதேயன் போன்ற எண்ணற்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவருக்கு ருத்ரை மற்றும் சுகீர்த்தி என்னும் இரண்டு மனைவியர் உள்ளனர்.

கருடசேவை தரிசனம்
மகாவிஷ்ணுவின் ஸ்தலங்களில் பெரிய திருவடி என்று போற்றப்படுபவர். ஸ்ரீமந் நாராயணன் எத்தனை விதமான வாகனத்தில் தரிசனம் தந்தாலும் கருட வாகனத்தில் தரிசனம் தருவது தனிச்சிறப்பு. கருடனை வணங்கும்போது மானசீகமாக வணங்க வேண்டும். ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருப்பதி, நவதிருப்பதிகள், திருநாங்கூர், திருநாராயணபுரம் நாச்சியார் கோவில் ஆகிய திருத்தலங்களில் நிகழும் கருட சேவைகள் தனிச்சிறப்பு உடையது.

பக்தர்கள் பரவசம்
கும்பாபிஷேகம் நடைபெறும் ஆலயங்களிலும் யாகங்கள் நடைபெறும் இடங்களிலும் கருடன் வட்டமிடுவது சிறப்பு. கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம். தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுதும், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போதும் வானத்தில் கருட தரிசனம் கிடைத்த பிறகே கும்பாபிஷேகத்தை நடத்தி மகிழ்கின்றனர்.

நோய் நீக்கும் கருட தரிசனம்
கருடசேவையைத் தரிசிப்பதால் பாவம் போக்கும். நாகத் தோஷம் போக்கும். தோல் வியாதிகள், நீண்ட நாள் பிணி நீங்கும். கருட தரிசனம், பூஜைகளிலும் மந்திர உச்சரிப்பிலும் அறியாமல் நிகழ்கிற தவறுகளால் ஏற்படும் பாவத்தைப் போக்க வல்லது .

எந்த நாளில் என்ன பலன்
கருடனை ஞாயிறன்று தரிசனம் செய்தால் நோய் அகலும், திங்கட்கிழமை கருடனை தரிசிப்பதால் குடும்ப நலம் பெருகும். செவ்வாய்கிழமை கருடனை தரிசிப்பதால் தைரியம் கூடும், புதன்கிழமை கருடனை தரிசிப்பதால் எதிரிகள் இல்லாத நிலை உருவாகும். வெள்ளிக்கிழமை கருடனை தரிசித்ல் பணவரவு கிடைக்கும். சனிக்கிழமை கருடனை தரிசித்தால் நற்கதி கிடைக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications