கனவில் வந்த சிவன்... சித்ரா பவுர்ணமியில் கண்டிப்பாக ஜீவ சமாதி அடைவேன் - இருளப்பசாமி உறுதி
சித்ரா பௌர்ணமி அன்று கண்டிப்பாக ஜீவசமாதி அடைந்து விடுவேன் என்று உறுதியாக சொல்லி வருகிறார் இருளப்பசாமி.
சிவகங்கை: கனவில் சிவன் வந்து அழைப்பதாகவும் சித்ரா பௌர்ணமி அன்று கண்டிப்பாக ஜீவசமாதி அடைந்து விடுவேன் என்று உறுதியாக சொல்லி வருகிறார் இருளப்பசாமி. இரண்டு வருடங்கள் கழித்து கண்டிப்பாக ஜீவசமாதி அடைந்து விடுவேன் என்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறார் இருளப்ப சாமி.
ஜீவசமாதி அடையப் போகிறேன் என்று ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி பல ஊர் மக்களையும் ஒன்று திரட்டி பரபரப்பை ஏற்படுத்தி விட்டு கடைசியில் இருளப்ப சாமி ஜீவசமாதி அடையவில்லை . கடந்த முறை இப்படி நடந்தது போல் இந்த முறை நடக்காது கண்டிப்பாக ஜீவ சமாதி அடைவேன் என்று கூறி வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் பாசங்கரை பகுதியைச் சேர்ந்தவர் இருளப்பசாமி . சிறுவயதிலிருந்தே இவர் சிவன் மீது பற்று கொண்டவராக இருந்திருக்கிறார். சிவன் மீது உள்ள பற்றினால் தன்னை சாமியாராக அறிவித்துக் கொண்டு சிவபூஜை செய்து வந்துள்ளார்.

கனவில் வந்த சிவன்
வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார். அப்போது கனவில் வந்த சிவன், உன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள் என்று சொன்னதாக இருளப்பசாமி தெரிவித்திருக்கிறார்.

போஸ்டர் ஒட்டிய சித்தர்
இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி அன்று அதிகாலை 12 மணி முதல் 5 மணிக்குள் இருளப்பசாமி ஜீவசமாதி அடையப் போவதாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினர். இதனால் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் கட்டப்பட்டன. பெரிய குழி தோண்டப்பட்டது. தீபாராதனை எல்லாம் இருளப்பசாமிக்கு காட்டப்பட்டது.

கைது செய்த போலீஸ்
அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனும் நேரில் சென்று இருளப்பசாமியிடம் ஆசி பெற்றார். கடைசியில் இருளப்பசாமி ஜீவசமாதி அடையவில்லை. இதனால் அங்கிருந்த ஆயிரக்கணக்கானோர் திரும்பிச் சென்றனர். இதனையடுத்து இருளப்பசாமியின் மகன் உட்பட அவரின் ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சித்ரா பவுர்ணமியில் ஜீவ சமாதி
இரண்டு வருடங்கள் கழித்து தற்போது வரும் சித்ரா பவுர்ணமி அன்று கண்டிப்பாக ஜீவசமாதி அடைந்து விடுவேன் என்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறார் இருளப்பசாமி. தான் ஜீவசமாதி அடைந்த பின்னர் முற்றிலும் கொரோனா நீங்கும் என்றும், தான் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் வந்து வேண்டிக் கொண்டால் நினைத்தது நிறைவேறும், குழந்தை பாக்கியம், உடல் சுகம் கிடைக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். சித்தர் இருளப்பசாமி.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications