கனவில் வந்த சிவன்... சித்ரா பவுர்ணமியில் கண்டிப்பாக ஜீவ சமாதி அடைவேன் - இருளப்பசாமி உறுதி
சித்ரா பௌர்ணமி அன்று கண்டிப்பாக ஜீவசமாதி அடைந்து விடுவேன் என்று உறுதியாக சொல்லி வருகிறார் இருளப்பசாமி.
சிவகங்கை: கனவில் சிவன் வந்து அழைப்பதாகவும் சித்ரா பௌர்ணமி அன்று கண்டிப்பாக ஜீவசமாதி அடைந்து விடுவேன் என்று உறுதியாக சொல்லி வருகிறார் இருளப்பசாமி. இரண்டு வருடங்கள் கழித்து கண்டிப்பாக ஜீவசமாதி அடைந்து விடுவேன் என்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறார் இருளப்ப சாமி.
ஜீவசமாதி அடையப் போகிறேன் என்று ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி பல ஊர் மக்களையும் ஒன்று திரட்டி பரபரப்பை ஏற்படுத்தி விட்டு கடைசியில் இருளப்ப சாமி ஜீவசமாதி அடையவில்லை . கடந்த முறை இப்படி நடந்தது போல் இந்த முறை நடக்காது கண்டிப்பாக ஜீவ சமாதி அடைவேன் என்று கூறி வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் பாசங்கரை பகுதியைச் சேர்ந்தவர் இருளப்பசாமி . சிறுவயதிலிருந்தே இவர் சிவன் மீது பற்று கொண்டவராக இருந்திருக்கிறார். சிவன் மீது உள்ள பற்றினால் தன்னை சாமியாராக அறிவித்துக் கொண்டு சிவபூஜை செய்து வந்துள்ளார்.

கனவில் வந்த சிவன்
வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார். அப்போது கனவில் வந்த சிவன், உன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள் என்று சொன்னதாக இருளப்பசாமி தெரிவித்திருக்கிறார்.

போஸ்டர் ஒட்டிய சித்தர்
இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி அன்று அதிகாலை 12 மணி முதல் 5 மணிக்குள் இருளப்பசாமி ஜீவசமாதி அடையப் போவதாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினர். இதனால் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் கட்டப்பட்டன. பெரிய குழி தோண்டப்பட்டது. தீபாராதனை எல்லாம் இருளப்பசாமிக்கு காட்டப்பட்டது.

கைது செய்த போலீஸ்
அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனும் நேரில் சென்று இருளப்பசாமியிடம் ஆசி பெற்றார். கடைசியில் இருளப்பசாமி ஜீவசமாதி அடையவில்லை. இதனால் அங்கிருந்த ஆயிரக்கணக்கானோர் திரும்பிச் சென்றனர். இதனையடுத்து இருளப்பசாமியின் மகன் உட்பட அவரின் ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சித்ரா பவுர்ணமியில் ஜீவ சமாதி
இரண்டு வருடங்கள் கழித்து தற்போது வரும் சித்ரா பவுர்ணமி அன்று கண்டிப்பாக ஜீவசமாதி அடைந்து விடுவேன் என்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறார் இருளப்பசாமி. தான் ஜீவசமாதி அடைந்த பின்னர் முற்றிலும் கொரோனா நீங்கும் என்றும், தான் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் வந்து வேண்டிக் கொண்டால் நினைத்தது நிறைவேறும், குழந்தை பாக்கியம், உடல் சுகம் கிடைக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். சித்தர் இருளப்பசாமி.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications