சீனா ஊடுருவல்: நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு திட்டம்
டெல்லி: சீனாவின் ஊடுருவல் தொடர்பாக நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து ராணுவ குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளை நமது ராணுவ வீரர்கள் கடுமையாக போராடி முறியடித்து வருகின்றனர்.
சீனாவுடனான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். லடாக் எல்லையைத் தொடர்ந்து தற்போது அருணாச்சல பிரதேச எல்லையிலும் சீனா படை குவிப்பில் இறங்கியுள்ளது. இதனால் சீனாவுடனான எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

விவாதிக்க கோரிக்கை
இதனிடையே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் சீனா ஊடுருவல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் லோக்சபாவில் சீனா ஊடுருவல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நீண்ட விளக்கம் அளித்தார்.

லோக்சபாவில் ராஜ்நாத்சிங் விளக்கம்
அதில், எல்லையில் சீனா 38,000 கி.மீ பரப்பளவை ஆக்கிரமித்திருக்கிறது; எல்லையில் சீனா ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டதை இந்திய வீரர்கள் முறியடித்தனர் என விவரித்திருந்தார் ராஜ்நாத்சிங். மேலும், சீனாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தன்னிச்சையாக மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என எச்சரிக்கப்பட்டிருப்பதையும் ராஜ்நாத்சிங் சுட்டிக்காட்டினார்.

சீனாவுக்கு எச்சரிக்கை
அத்துடன், எல்லையில் சீனாவின் எந்த ஊடுருவலையும் எதிர்கொள்ள நமது ராணுவம் தயாராக இருகிறது. நாம் நமது ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக துணை நிற்க வேண்டும் என்றும் ராஜ்நாத்சிங் கேட்டுக் கொண்டார். ஆனால் விவாதம் நடத்தாமல் விளக்கம் மட்டும் தந்ததை ஏற்க முடியாது என கூறி காங்கிரஸ் எம்.பிக்கள் லோக்சபாவில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.

கட்சி தலைவர்களுக்கு விளக்கம்?
இதனிடையே எல்லை பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாத கட்சியின் தலைவர் ஒருவர் ஊடகங்களிடம் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என தெரிகிறது.
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்!












Click it and Unblock the Notifications