நான் கழுகு.. சூர்யா காக்கா.. “போகாத ஜெயில் இல்ல.. என்னை சீண்டவேண்டாம்” : வரிச்சியூர் செல்வம் ஆவேசம்!
திருச்சி சூர்யா என்னை ரவுடி எனக் கூறியது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என வரிச்சியூர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை : "ஒரு மனிதனை இழிவுபடுத்தக் கூடாது. திருந்தி விட்டால் அவருக்கு உறுதுணையாகத்தான் இருக்க வேண்டும். நான் உயர பறக்கும் கழுகு. ஆனால் சூர்யா ஒரு காகம். நான் கடலில் நீந்துகிறவன், ஆனால் சூர்யா கிணற்றில் நீந்துகிறவர்" எனக் கூறியுள்ளார் வரிச்சியூர் செல்வம்.
வரிச்சியூர் செல்வத்தை காயத்ரி ரகுராம் சந்தித்தது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யாவுக்கும் வரிச்சியூர் செல்வத்திற்கும் இடையே இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், இருவரும் மாறி மாறி செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்றனர். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வரிச்சியூர் செல்வம், திருந்தி வாழும் தன்னை சீண்ட வேண்டாம் என திருச்சி சிவாவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வரிச்சியூர் செல்வம்- சூர்யா சிவா
வரிச்சியூர் செல்வம் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, காயத்ரி ரகுராமுடன் நான் இருக்கும் புகைப்படத்தை திருச்சி சூர்யா வெளியிட்டிருந்தார். அதில் எந்த தவறும் இல்லை, இப்படியெல்லாம் போட்டோவை வெளியிடலாமா எனக் கேட்டேன். உடனே திருச்சி சூர்யாவும் என்னிடம் மன்னிப்பு கேட்டு அதை எடுத்துவிட்டார் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் வரிச்சியூர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்றும் வரிச்சியூர் செல்வம் தனக்கு அனுப்பிய ஆடியோ மெசேஜை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார் திருச்சி சூர்யா.

நான் போகாத ஜெயில் இல்லை
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வரிச்சியூர் செல்வம், "திருச்சி சூர்யா என்னிடம் மன்னிப்புக் கேட்டார் என்று நான் பேச்சுவாக்கில் சொன்னேன். திருச்சி சூர்யாவும் தனது பிரஸ் மீட்டில் வரிச்சியூர் செல்வம் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று சொன்னாலும் பரவாயில்லை நான் வருத்தப்பட்டு இருக்கமாட்டேன். என்னை ரவுடி என திருச்சி சூர்யா சொன்னது தான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் தமிழ்நாட்டில் போகாத ஜெயில்களே இல்லை, இந்தியாவில் 4 மாநில ஜெயில்களில் இருந்துள்ளேன். கடைசியாக திருச்சி ஜெயிலில் இருந்து வெளியே வரும்போது தேங்காய் உடைத்து இனிமேல் ஜெயில் பக்கமே போகமாட்டேன் என சபதம் எடுத்தேன்.

ரவுடி என சொல்ல நீ யாரு
என் மீது தற்போது எந்த வழக்கும் கிடையாது. என்னால் என் குடும்பத்தினர் பாதிக்கக்கூடாது. அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு எனது பேரன் பேத்திகளுக்காக வாழ்ந்து வருகிறேன். என்னை ரவுடி என சொல்வதற்கு திருச்சி சூர்யா யார்? ஒரு மனிதனின் தன்மானத்தை நோண்டக்கூடாது. நான் இனிமேல் எந்த தவறும் செய்யமாட்டேன் என போலீசாரிடம் எழுதிக் கொடுத்துள்ளேன். நான் பாட்டுக்கு ஜாலியாக போய்க்கொண்டிருக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள். ரவுடி என்பது போலீசாரால் கொடுக்கப்பட்ட பட்டம். இன்னும் 2 ஆண்டுகளில் போலீசாரே அதை எடுத்துவிடுவார்கள்.

நான் கழுகு.. சூர்யா காகம்
எனக்கு சூர்யாவை யார் என்றே தெரியாது. மதுரையில் பெல் ஹோட்டலில் சாப்பிடச் சென்றபோது மாஸ்டர் கணேஷ் மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோரிடம் போட்டோ எடுத்தேன். இதனை திருச்சி சூர்யா சமூக வலை தளத்தில் "ரவுடியுடன் உனக்கு என்ன வேலை" என்று கேட்டு பதிவிட்டார். டெய்சி என்ற பெண்ணுடன் திருச்சி சூர்யா சண்டை போட்டுள்ளார். திருச்சி சூர்யா எனக்கு ஒரு ஆளே கிடையாது. சமீபத்தில் ஒரு பஸ்ஸை திருடிச் சென்று விட்டதாக கேள்விப்பட்டேன். நான் உயர பறக்கும் கழுகு. ஆனால் சூர்யா ஒரு காக்கா. நான் கடலில் நீந்துகிறவன், ஆனால் சூர்யா கிணற்றில் நீந்தக்கூடிய ஆள்.

அரசியலில்
சூர்யா பெண்களுடன் சண்டை போடுவதையே வாடிக்கையாக கொண்டவர். தற்போது என்னை வம்பிழுத்து இருக்கிறார். நான் செத்துப்போன ரவுடி. திருந்தி நல்ல மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் அப்பா திமுகவின் பயங்கர விசுவாசி. 1978-இல் அதிமுகவினர் எனது தந்தையை வெட்டினார்கள். செல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு கொடுத்த தங்கத்தை எனது அப்பாவுக்கு கருணாநிதி கொடுத்தார். அப்படிப்பட்ட கட்சியில் நான் சேர்ந்து பேரை கெடுத்துவிடக்கூடாது. இந்த தோரணையில் கட்சியில் போய் சேரவும் முடியாது. இப்படியே போய் கட்சியில் சேர்ந்தால் நல்லா இருக்குமா? வெள்ளை வேட்டி சட்டை போடுவது எனக்குப் பிடிக்காது.
-
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி












Click it and Unblock the Notifications