ரேசனில் அரிசி, கோதுமை சரியாக கிடைப்பதில்லை.. விஜயகாந்த் குற்றச்சாட்டு !
தமிழகம் முழுவதும் ரேசன் பொருட்களை தடையில்லாமல் அனைவருக்கும் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் அரிசி, மன்ணெண்ணெய், சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற பொருட்கள் சமீப காலமாக சரிவர கிடைப்பதில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுவதும் இருக்கின்ற பல இலட்சக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் இன்றைக்கு நம்பி இருப்பது ரேசன் கடைகளின் கிடைக்கும் பொருட்களைத்தான். ஆனால் ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் அரிசி, மன்ணெண்ணெய், சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற பொருட்கள் சமீப காலமாக சரிவர கிடைப்பதில்லை.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழக மக்கள் பல விதமான இன்னல்களை சந்தித்துகொண்டு இருக்கும் வேளையில், ஒருபுறம் தண்ணீர் பிரச்சனை, ரேசன் பொருட்கள் கிடைப்பதில்லை, வேலை இல்லா திண்டாட்டம், வறுமை, வறட்சி, விவசாயிகள் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளில் தமிழக மக்கள் சிக்கித்தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களித்ததன் விளைவு, இன்றைக்கு சிந்திக்க வேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஊழல் இல்லாத நல்ல தலைமை தமிழகத்திற்கு தேர்வு செய்யவேண்டும் என்று அனைவரும் சிந்திக்க ஆரமித்துவிட்டார்கள். ஏற்கனவே ஜெயலலிதாவின் நிலையான ஆட்சி இருக்கும் பொழுதே, ரேசன் பொருட்கள் சரிவர மக்களிடையே கிடைக்கவில்லை, இப்பொழுது நிலையில்லாத ஆட்சி நடைபெறும் பொழுது எப்படி ரேசன் பொருட்கள் சரியாக கிடைக்கும் என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த நிலையில்லாத ஆட்சி உடனடியாக ரேசன் பொருட்களை சரியான முறையில் மக்களுக்கு சென்றடைய செய்து, தட்டுப்பாடில்லாத நிலமையை உருவாக்க வேண்டும். உடனடியாக நிலையில்லாத ஆட்சியான அதிமுக மக்களின் நிலையை புரிந்துகொண்டு உடனடியாக தமிழகம் முழுவதும், ரேசன் பொருட்களை தடையில்லாமல் அனைவருக்கும் கிடைத்திட செய்ய வேண்டும்.
இந்த நிலைமை தமிழகத்திற்கு வரக்கூடாது என்று எண்ணித்தான் வீடுதேடி ரேசன் பொருட்கள் வரும் என்கிற ஒரு நல்ல திட்டத்தை தேசிய முற்போக்கு திராவிட கழகம் அறிவித்திருந்தது. ஆளுபவர்கள் இங்கு மாறிக்கொண்டு இருந்தாலும், தமிழக மக்களின் நிலை இங்கு மாறவில்லை. இந்த நிலை மாறி மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்பதுதான் தேமுதிகவின் ஒரே குறிக்கோள். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications