தமிழகத்தில் பல்கி பெருகும் கொரோனா.. இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடல்
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதை தடுக்க இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 9,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரே நாளில் மாநிலத்தில் 39 பேர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார்கள். தமிழகத்தில் தற்போது 65,635 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே நாளில் மட்டும் 1,00,804 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக 2884 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் 9.80 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஊரடங்கு
இரண்டாவது அலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, 15 நாட்கள் முழு ஊரடங்கு, வார இறுதியில் ஊரடங்கு என கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

50 சதவீதம்
இந்த நிலையில் தமிழகத்தில் ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், ஹோட்டல்கள், தேனீர் கடைகள் உள்ளிட்ட இடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல் கோயம்பேடு சந்தையில் சில்லறை வியாபார கடைகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தை
இந்த நிலையில் நேற்றைய தினம் கொரோனா பாதிப்பு 9ஆயிரத்தை தாண்டியதால் கோயம்பேடு சந்தையை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 ஆவது மற்றும் 4ஆவது ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது.

கோயம்பேடு சந்தை மூடல்
தற்போது இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியது. இதனால் கோயம்பேடு வியாபாரிகளு்ம பொதுமக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications