அரசியலை இப்படியே விட்டுவிடக் கூடாது.. தேவை வரும் போது கோட்டை நோக்கி புறப்படுவோம்: நடிகர் கமல்ஹாசன்
இந்த அரசியலை இப்படியே விட்டுவிட கூடாது; தேவை வரும் போது கோட்டை நோக்கி புறப்படுவோம் என நடிகர் கமல்ஹாசன் ஆவேசமாக பேசியுள்ளார்.
கோவை: இந்த அரசியலை இப்படியே விட்டுவிடக் கூடாது; தேவை வரும்போது கோட்டை நோக்கி புறப்படுவோம் என நடிகர் கமல்ஹாசன் ஆவேசமுடன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக அரசியல் குறித்தும் தற்போதைய அதிமுக ஆட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். ட்விட்டரில் திடீர் திடீரென கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் கமல்ஹாசன். அவர் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சந்தடி சாக்கில் அதிமுகவை விமர்சித்து வருகிறார்.

அதிமுக மீது விமர்சனம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் கமல்ஹாசன். அவர் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சந்தடி சாக்கில் அதிமுகவை விமர்சித்து வருகிறார்.

ஆரம்ப விழா
இந்நிலையில் கோவை ஈச்சனாரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: இதை திருமண விழாவாக பார்க்கவில்லை. இதனை ஆரம்ப விழாவாக கருதுகிறேன்.

திருடர்களை அனுமதித்தோம்
ஓட்டுக்காக பணம் பெற்று திருடர்களை அனுமதித்து விட்டோம். அரசியலை இப்படியே விட்டு வைக்கக்கூடாது. அரசியல் சூழலை இப்படியே விட்டுவைக்காமல் அதனை மாற்ற வேண்டியது நம் கடமை.

சமூகத்தின் மீது கோபம்
இந்த சமூகத்தின் மீதான கோபம் எனக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. தலைமையேற்க எனக்கு தைரியம் வந்துவிட்டதா என்று கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு தைரியம் வந்துவிட்டதா?

தேவைப்பட்டால் கோட்டை நோக்கி..
நாம் நமது வேலையை செய்வோம். தேவைப்பட்டால் கோட்டையை நோக்கி புறப்படுவோம். தொடர்ந்து போராடுங்கள். தொடர்ந்து கேள்வி கேளுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

சுத்தமாக வைப்போம்...
தமிழகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள தொடர்ந்து போராடுங்கள். சொத்து சேர்த்தால் மட்டும் போதாது; அதை மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
-
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
“துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா?” போட்டியிட மறுத்ததற்கு காரணம் இதுதான்! திருமாவளவன் விளக்கம் -
காங்கிரஸ்-க்கு குட்பை.. விலகுவதாக அறிவித்தார் அமெரிக்கை நாராயணன்.. கட்சி மீது கடும் அதிருப்தி -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
பென்னாகரத்தில் ஒரே சத்தம்.. சூத்திரதாரி திமுக தானே மணி.. ராமதாஸின் பிளானையே ஓவர்டேக் செய்தாச்சா -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
திருமாவளவனை மீறி.. ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நெருக்கம்.. "ஒன்இந்தியாவிடம்" குமுறிய சங்கத்தமிழன்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்!











Click it and Unblock the Notifications