கோவையில் பரிதாபம்.. பக்கவாதத்தால் மனைவி மரணம்.. அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த கணவர்!
கோவை: கோயம்புத்தூரில் மனைவி உயிரிழந்த துக்கத்தை தாங்க முடியாமல் கணவரும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரில், சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. வயது 74. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி சரோஜினி. வயது 72. இவர் கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சரோஜினி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரை இவரது மகள் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், சரோஜினி நேற்று உயிரிழந்தார். இதையறிந்த கணவர் மணி துக்கம் தாங்காமல் அழுதுள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணி, சரோஜினி தம்பதிகளின் உடல்கள் ஒரே நேரத்தில் நஞ்சுண்டாபுரம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. வாழ்விலும் ஒன்றிணைந்து இருந்து, சாவிலும் இந்த தம்பதிகள் இணைந்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications