ஓய்ந்தது பிரச்சாரம்..உபியில் நாளை மறுநாள் இறுதி கட்ட தேர்தல்.. யோகி VS அகிலேஷ்.. யாருக்கு செல்வாக்கு
லக்னோ : இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட உத்தரபிரதேச மாநில இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று பிரச்சாரம் ஓய்ந்து உள்ளது. உபி மக்கள் யாருக்கு வாய்ப்பளிக்க போகிறார்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம்.
இந்நிலையில் மாநிலத்தில் ஏழாவது கட்ட தேர்தல் மார்ச் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் உத்திர பிரதேச தேர்தலில் தனித்தனியாக பலப் பரிட்சை நடத்துகின்றன.

உத்திரபிரதேச தேர்தல்
உத்திரபிரதேசத்தில் அசம்கர், மௌ, ஜான்பூர், காஜிபூர், சந்தோலி, வாரணாசி, மிர்சாபூர், பதோஹி மற்றும் சோன்பத்ரா உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் உள்ள 54 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக மார்ச் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தின் ஏழாவது மற்றும் கடைசிக் கட்ட தேர்தலையொட்டி மத்திய மாநில பொது நிறுவனங்கள் மற்றும் பிற பணியாளர்கள் அனைவரும் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்காக நாளை மறுநாள் அதாவது மார்ச் 7ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

7 கட்ட வாக்குப் பதிவு
403 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றது. 2ஆம் கட்ட வாக்குப் பதிவு 14ஆம் தேதியும், 3ஆம் கட்ட வாக்குப் பதிவு 20ஆம் தேதியும், 4ஆம் கட்டமாக வாக்குப் பதிவு 23ஆம் தேதியும், 5ஆம் கட்ட வாக்கு பதிவு 27ஆம் தேதியும் நடைபெற்றது. கடைசியாக 6ஆம் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 3ஆம் தேதியும் நடைபெற்று முடிவடைந்தது.

தீவிர பிரச்சாரம்
உத்திரபிரதேச மாநிலத்தில் இதுவரை 349 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் அதாவது மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் அவர் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

சூடு பிடித்த களம்
பிரச்சாரத்திற்கு இன்று இறுதி நாள் என்பதால் வாக்கு சேகரிப்பில் சூறாவளி பயணத்தை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மேற்கொண்டனர். வீதிவீதியாக கட்சியின் உள்ளூர் பிரமுகர்கள் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், தலைவர்களும் முக்கிய நகரங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மாலை 6 மணியுடன் பிரச்சார முடிந்துள்ள நிலையில், நாளை மறுநாள் காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி 6 மணி வரை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உத்தரப் பிரதேச மாநில சட்டசபையை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications