ராஜஸ்தானில் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் சென்னை இணை கமிஷனர் ஆய்வு
ராஜஸ்தானில் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் சென்னை இணை கமிஷனர் ஆய்வு செய்து உள்ளார்.
ஜோத்பூர்: ராஜஸ்தானில் கொள்ளையர்களால் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் சந்தோஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் உள்ள கொளத்தூர் நகைக்கடை ஒன்றில் கடந்த மாதம் 3.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலைப் பிடிக்க சென்னையச் சேர்ந்த தனிப்படை ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் விசாரணை நடத்தியது.

அதில் கொள்ளையர்கள் பதுங்கி இருக்கும் பகுதியை நெருங்கியபோது, போலீஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பெரிய பாண்டியனின் உடல் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இன்னொரு ஆய்வாளரான முனிசேகரனும் கடுமையான காயம் அடைந்ததால் அவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், சம்பவம் குறித்து தகவல் தெரிந்ததும் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ் குமார் மற்றும் தனிப்படை போலீஸார் சிலர் நேற்று காலை விமானம் மூலம் ராஜஸ்தான் கிளம்பிச் சென்றார். நேற்று ராஜஸ்தான் மாநில காவல்துறையினருடன் கொள்ளையர்களை பிடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இன்று மாலை இணை ஆணையர் சந்தோஷ் குமார் ஆய்வு நடத்தி உள்ளார். இந்நிலையில், பெரியபாண்டியனை சுட்ட கொள்ளை கூட்ட தலைவன் நாதுராமின் வலதுகரமாக செயல்பட்ட அவரது கூட்டாளி தினேஷ் செளத்ரி தற்போது ராஜஸ்தானில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications