"ஏ" சறுக்கிருச்சா.. கவலையே படாதீங்க.. பல நேரங்களில் "பி" தான் ஜெயிக்கும்!
அடடா பிளான் சறுக்கிருச்சே என்று பலர் வருந்துவார்கள், பதட்டமாவார்கள். கவலையை விடுங்க பாஸ்.. பல நேரங்களில் பிளான் பி தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஜாம்பவான்களுக்கே அப்படித்தான் நடந்திருக்கிறது என்று இருக்கும்போது சாமானியர்கள் நாம் கவலைப்படலாமா.. .கூடவே கூடாது.. இன்னும் உத்வேகத்துடன் இறங்கி அடிக்க வேண்டும்.
ஒரு செயலை சரியாகச் செய்து முடிக்க எப்போதுமே நாம் இரண்டு பிளான் வைத்திருக்க வேண்டும். இது இல்லை என்றால் இன்னொன்று. இதற்காக கவலைப்படலாமா. நம் இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை நாம் வகுத்து வைத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் இரண்டு திட்டங்கள் வைத்திருங்கள். ஒன்று சொதப்பினால் இன்னொன்று வைத்து நாம் நினைத்ததைச் சாதித்துக் கொள்ளலாம்.
பள்ளிக் காலத்தில் நாம் கற்ற கணக்குகளில் கூட ஒரு கணக்கிற்கு விடை காண இரண்டு முறைகள் இருக்கும் போது நாம் நம்முடைய வேலையைத் திறம்பட செய்து முடிக்க எப்போதும் இரண்டு பிளான்கள் வைத்திருக்க வேண்டும். நாம் பயணம் செல்லும் காரில் கூட ஒரு டயர் பழுது அடைந்தால் இன்னொரு டயர் வைத்திருப்போம். அது போல் நாம் செய்யும் செயலிலும் வெற்றி பெற இரு வழிகள் வேண்டும்.
முதல் பிளானில் தோற்றால் கவலைப்படாதீர்கள். இருக்கவே இருக்கிறது இன்னொன்று அதை வைத்து நிறைவேற்றிக் கொள்ளுங்கள். தோல்வி என்றும் நிரந்தரம் கிடையாது. இரண்டாவது வழியைத் தளராமல் முயற்சி செய்து வெற்றி பெறுங்கள்.
ஒன்று சொதப்பினால் என்ன அதான் இன்னொன்று இருக்கிறதே பிறகு எதற்கு கவலை. உங்கள் செயல்களைச் சிறப்பாக செய்து வாழ்வில் வெற்றி வாகை சூடுங்கள்.