For Daily Alerts
Just In
மதத்தலைவர்களை சந்திக்கிறார் வாஜ்பாய்
கோட்டயம்:
கேரள மாநிலம் குமரோகம் பகுதிக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ள பிரதமர் வாஜ்பாய் அங்கு கலாச்சார, மதத்தலைவர்களை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து பாரதிய ஜனதாக் கட்சியினர் கூறுகையில், கேரளா சென்றுள்ள பிரதமர் வாஜ்பாய் குமரோகமில் உள்ளதாஜ் கார்டன் ரீட்ரீட் ஹோட்டலில் தங்கியுள்ளார்.
பிரதமரை சந்திப்பதற்காக கலாச்சார, மதத் தலைவர்கள் ஏற்கனவே தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.யார், யாரை சந்தித்துப் பேசுவது என்பது குறித்து ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது.
பிரதமர் எப்போது அவர்களை சந்திப்பார்கள் என்பது குறித்து பிரதமருடன் முகாமிட்டுள்ள ஆலோசகர்கள்தெரிவிப்பார்கள் என்றனர்.
யு.என்.ஐ.
Story first published: Thursday, December 28, 2000, 5:30 [IST]