For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈவ் டீசிங்: கோவை அருகே பள்ளி மாணவி தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மாவட்டம் தளி என்ற ஊரில் ஈவ் டீசிங் கொடுமை தாங்காமல் ஒரு பள்ளி மாணவி பூச்சி மருந்தைக்குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

தளி என்ற ஊரைச்சேர்ந்த 16 வயது பள்ளிக் கூட மாணவி சங்கீதா. இந்தப் பெண் பள்ளிக்குச் செல்லும் வழியில்அதேபகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்ற இளைஞர் சங்கீதாவைக் கேலியும், கிண்டலும் செய்வதை வழக்கமாகவைத்திருந்திருக்கிறார்.

இதுகுறித்து சங்கீதா பல முறை தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் இதைப் பெரிதாகஎடுத்துக்கொள்ளவில்லை.

அதனால் சங்கீதாவுக்கு ஈஸ்வரன் கொடுத்த தொல்லைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. தொடர்ந்து அவர் சங்கீதாவைக்கேலி செய்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் தென்னை மரங்களுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தைஎடுத்துக் குடித்துவிட்டார். இதையறிந்ததும் அவரது பெற்றோர், சங்கீதாவை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் சங்கீதா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார்வழக்குப் பதிவு செய்து, ஈஸ்வரனைத் தேடி வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X