அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்
நியூயார்க்:
அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்துஅந் நாட்டில் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. அமெரிக்க வரலாற்றிலேயே இதுபோலவிமானப் போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதில் 110 மாடிகளைக் கொண்ட இரட்டைக் கட்டிடம் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது. மேலும் வாஷிங்டன்நகரில் உள்ள பெண்டகன் என்ற இராணுவமையத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து அமெரிக்காவிற்கு வந்துகொண்டிருந்த விமானங்கள் அனைத்தும் நடுவானில் செய்தி தரப்பட்டுகனடாவிற்குத் திருப்பி விடப்பட்டன.
மேலும் அமெரிக்காவில் இருந்தும் எந்த விமானமும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில்விமானப் போக்குவரத்தை ஒரு நாள் முழுவதும் நிறுத்தப் போவதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
புதன்கிழமை பிற்பகலில் தான் (இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு) மீண்டும் அங்கு விமானப்போக்குவரத்துத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.