ஜெயலலிதாவை விடமாட்டேன்: மீண்டும் வழக்குப் போடுவேன்- சுவாமி சபதம்
சென்னை:
டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வேன் எனஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது டான்சி நிலத்தை அவர் வாங்கியதை எதிர்த்துசுப்பிரமணியம் சுவாமி தான் வழக்குத் தொடர்ந்தார். இதனால், முதல்வர் பதவியையே அவர் இழக்கவேண்டியதாயிற்று. ஆனால், இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுவிட்டார். மீண்டும்முதல்வராகவுள்ளார்.
இந் நிலையில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனுத் தாக்கல்செய்யப் போவதாக சுப்பிரமணியம் சுவாமி கூறிள்ளார். சென்னையில் இன்று (சனிக்கிழமை) நிருபர்களிடம் பேசியஅவர்,
விடுதலை குறித்த தீர்ப்பின் நகல்களைக் கேட்டு சென்னை நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளேன். இந்த நகல்வந்தவுடன் உச்ச நீதிமன்றம் செல்வேன். ஆனால், டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் விடுமுறை வருவதால் ஜனவரி முதல்வாரத்தில் தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13 (1)(டி) பிரிவின் கீழ் அரசு ஊழியராக இருப்பவர் அரசிடமிருந்து எந்தவிதமானதனிப்பட்ட பலனையும் அனுபவிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, ஜெயலலிதாவை விட மாட்டேன்.
பெரியார் மையம் இடிப்பு- நான் காரணமல்ல:
டெல்லியில் பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் அனுமதியில்லாமல் கட்டப்பட்டதால் தான் பெரியார் மையம்இடிக்கப்பட்டுள்ளது. இதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்த மையம் இடிப்புக்கு நான் தான் காரணம் எனஜெயலலிதாவும் கி.வீரமணியும் குற்றம் சாட்டுவதில் உண்மையில்லை.
நான் ஏற்கனவே கூறிய மாதிரி பா.ஜ.க. கூட்டணியில் இணைய ஜெயலலிதா தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார்.