மக்களைக் கவரும் நலத்துறை அமைச்சர்
சென்னை:
தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சுதர்சனம் மக்கள் மனதைக் கவரும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
அமைச்சர் சுதர்சனம், தன்னிடம் கொடுக்கப்படும் மனுக்களையும், கோரிக்கைகளையும் உடனுக்குடன் பரிசீலித்துநடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார். ஒரு மனுவும் தவறுதலாக விடுபட்டு விடக் கூடாது என்பதில் அவர் அதிககவனம் செலுத்துகிறார்.
இதுகுறித்து சுதர்சனம் கூறியதாவது:
அம்மாவின் ஆட்சியை சிறப்புற நடத்துவது என்னைப் போன்ற அமைச்சர்களின் கடமை. எனது ஓய்வைப் பற்றிக்கூட எனக்குக் கவலையில்லை.
ஏழை, எளியவர்கள், பிற்பட்டோரின் முன்னேற்றத்திற்காகவே அம்மா பாடுபடுகிறார்.
எனவே அவரது குறிக்கோளை நிறைவேற்றும் முயற்சியில் சற்றும் சோர்வுற மாட்டேன் என்று தன்னிடம்வருபவர்களிடம் கூறுகிறார் சுதர்சனம்.
சுதர்சனத்தின் மற்றொரு செயலும் அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.
தனக்கு ஏதாவது பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டால் அல்லது விழாக்களில் கலந்து கொண்டால் தனக்குஅணிவிக்கப்படும் மாலைகள், பொன்னாடைகள் ஆகியவற்றை, அதை அணிவித்தவர்களுக்கே அணிவித்துஅவர்களை சந்தோஷப்படுத்துகிறார் சுதர்சனம்.
அதிமுக தொண்டர்களாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி எளிய முறையில், புன்னகை பூத்தமுகத்துடன் பழகும் அமைச்சர் சுதர்சனத்திற்கு பொதுமக்களிடையே நல்ல பெயர் கிடைத்து வருகிறது.