3 ஆண்டுக்கு மேல் சிறை: சிறார்களை விடுவிக்க உத்தரவு
சென்னை: குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதாகி, சிறுவர் சீர்திருத்த முகாம்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமியரை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வி.பாலசந்தர் என்கிற சமூக சேவகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,
சிறுவர் சீர்திருத்த சிறப்பு இல்லங்களில் நான் சமூக சேவை செய்து வருகிறேன். வேலூர் இல்லத்திலும், சென்னை கெல்லீஸ் சிறுமிகளுக்கான இல்லத்திலும் உள்ள ஆவணங்களை பார்க்கும்போது 3 ஆண்டுக்கும் மேலாக பலர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது இளம் சிறார்கள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். ஆகவே, 3 ஆண்டுகளுக்கு மேலாக காவலில் வைத்திருக்கும் சிறுவர்-சிறுமிகளை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் வெங்கட்ராமன், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்,
இளம் சிறார் பாதுகாப்பு சட்டம் 1986-ல் கொண்டுவரப்பட்டது. 2000 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. குற்றங்களுக்காக சிறப்பு இல்லங்களில் காவலில் வைக்கப்பட்டு 3 ஆண்டு தண்டனை அனுபவித்துவிட்டால் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
4 வயதுக்கு குறையாத சிறுவர்களும், 16 வயதுக்கு குறையாத சிறுமிகளும் சிறப்பு இல்லங்களில் காவலில் வைக்கப்படுகிறார்கள். சிறுவர்களை 18 வயது வரையும், சிறுமிகளை 20 வயது வரையிலும் காவலில் வைக்க சட்டத்தில் இடம் உள்ளது.
அதே சமயம், 3 ஆண்டுகள் மட்டுமே இவர்களை காவலில் வைக்க முடியும். இளம் சிறார் கண்காணிப்பு இல்லங்கள் அல்லது சிறப்பு இல்லங்கள் ஆகியவற்றில் 3 ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்டவர்கள், அந்த காவல் முடிந்ததும் விடுதலை செய்யவேண்டும். எப்படிப்பட்ட குற்றங்கள் செய்தாலும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
ஆகவே, இளம் சிறார் சிறப்பு இல்லங்கள் மற்றும் கண்காணிப்பு இல்லங்களில் 3 ஆண்டுக்கு மேல் காவலில் இருக்கும் இளம் சிறார்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள சிறார் சீர்திருத்த இல்லங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் அடைக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமியர் விடுதலையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை இன்னும் 30 சதவீதம் சரிய போகுது.. இன்ப அதிர்ச்சி தந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர் -
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்!












Click it and Unblock the Notifications