For Daily Alerts
Just In
பாஜகவில் நிலைமை மோசமாகி வருகிறது-சுஷ்மா
போபால்: பாஜகவில் தற்போது நிலைமை குறித்து எதுவும் சொல்வதற்கில்லை. அங்கு நிலைமை கொந்தளிப்புடன் காணப்படுகிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ்.
போபால் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிலைமை தற்போது எரிமலை போல உள்ளது. எரிமலை குமுறிக் கொண்டிருக்கும்போது சிறிய தீப்பொறி பட்டால் கூட போதும், அது கொளுந்து விட்டு எரியத் தொடங்கும்.
எல்.கே.அத்வானி எதிர்க்கட்சித் தலைவராக தொடருவதில் எந்தத் தவறும் இல்லை. இதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்தக் கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை என்றார் சுஷ்மா.
Story first published: Monday, June 15, 2009, 15:24 [IST]