For Daily Alerts
Just In
வழக்கு பதியாத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சிங்கம்புணரி: புகாரின் மீது வழக்கு பதியாத சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காசியாபிள்ளை நகரை சேர்ந்தவர் மணிமொழி. தனியார் பள்ளி ஆசிரியர். இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் 3 ம் தேதி, பத்து பவுன் நகைகள் களவு போனது.
அதேபோல, இதே பள்ளியில் பணிபுரியும் சித்ரா, சுந்தரம் நகர் ரோட்டில் நடந்து சென்ற போது டூவீலரில் வந்த இருவர் மூன்று பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.
இருவரும் சிங்கம்புணரி போலீசில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் வழக்கு பதியவில்லை.
இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு இருவரும் புகார் அனுப்பினர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜசேகரனை மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
Comments
Story first published: Friday, October 23, 2009, 11:45 [IST]