சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம்: ராஜபக்சே முடிவுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை: இலங்கையில் இனி தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு ராஜபக்சே அரசு தடை விதித்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் இந்த முடிவால் ஈழத் தமிழர்களின் மனம் மேலும் வேதனை அடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனி தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது என்றும், சிங்களத்தில் மட்டும் தான் பாட வேண்டும் என்று அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முடிவு எடுக்கப்பட்டபோது அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் அமைச்சர்கள் வாய் மூடி மெளனமாக இருந்து விட்டனர்.
இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதால் அங்கு சிங்களம் தவிர தமிழும் ஆட்சி மொழியாக உள்ளது. இதனால் தமிழர் பகுதிகளில் தமிழ் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். சிங்களப் பகுதிகளில் சிங்கள தேசிய கீதம் இசைக்கப்படும்.
பழமை வாய்ந்த இந்த பழக்கத்தை தற்போது ராஜபக்சே அரசு மாற்றுகிறது. இனி அனைத்து பகுதிகளிலும் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என்று கூறியுள்ளார் ராஜபக்சே. லண்டனில் தமிழர்களால் துரத்தப்பட்டு இலங்கைக்கு தப்பி ஓடி வந்த நிலையில், அந்த ஆத்திரத்தில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் சிங்களர்களும், தமிழர்களும் வசித்து வருகின்றனர். அதனால் அந்நாட்டு தேசிய கீதம் இந்நாள் வரை சிஙகளத்திலும், தமிழுலும் பாடப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது ராஜபக்சே அரசு அந்த வழக்கத்திற்கு தடை விதித்து இனி இலங்கை தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கான தீர்மானமும் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும் ஏடுகள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் உண்மை என்றால் ராஜபக்சே அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே புண்பட்டிருக்கும் தமிழர்களை இந்த செய்தி மேலும் புண்படுத்தும். இலங்கையின் அரசின் இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் கூறினார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications