சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம்: ராஜபக்சே முடிவுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை: இலங்கையில் இனி தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு ராஜபக்சே அரசு தடை விதித்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் இந்த முடிவால் ஈழத் தமிழர்களின் மனம் மேலும் வேதனை அடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனி தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது என்றும், சிங்களத்தில் மட்டும் தான் பாட வேண்டும் என்று அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முடிவு எடுக்கப்பட்டபோது அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் அமைச்சர்கள் வாய் மூடி மெளனமாக இருந்து விட்டனர்.
இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதால் அங்கு சிங்களம் தவிர தமிழும் ஆட்சி மொழியாக உள்ளது. இதனால் தமிழர் பகுதிகளில் தமிழ் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். சிங்களப் பகுதிகளில் சிங்கள தேசிய கீதம் இசைக்கப்படும்.
பழமை வாய்ந்த இந்த பழக்கத்தை தற்போது ராஜபக்சே அரசு மாற்றுகிறது. இனி அனைத்து பகுதிகளிலும் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என்று கூறியுள்ளார் ராஜபக்சே. லண்டனில் தமிழர்களால் துரத்தப்பட்டு இலங்கைக்கு தப்பி ஓடி வந்த நிலையில், அந்த ஆத்திரத்தில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் சிங்களர்களும், தமிழர்களும் வசித்து வருகின்றனர். அதனால் அந்நாட்டு தேசிய கீதம் இந்நாள் வரை சிஙகளத்திலும், தமிழுலும் பாடப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது ராஜபக்சே அரசு அந்த வழக்கத்திற்கு தடை விதித்து இனி இலங்கை தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கான தீர்மானமும் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும் ஏடுகள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் உண்மை என்றால் ராஜபக்சே அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே புண்பட்டிருக்கும் தமிழர்களை இந்த செய்தி மேலும் புண்படுத்தும். இலங்கையின் அரசின் இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் கூறினார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications