நாட்டில் ஊழல் சம்பவங்கள் அதிகரிப்பது மக்களை விரக்திக்குள்ளாக்கியுள்ளது-அத்வானி

முன்னாள் எம்.பி. இரா. செழியன் எழுதிய “ஷா கமிஷன் அறிக்கையில் கிடைத்ததும், தொலைந்ததும்" என்ற புத்தக வெளியீட்டு விழா மயிலாப்பூரில் நடந்தது. அத்வானி புத்தகத்தை வெளியிட்டார். எழுத்தாளர் சோ, ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் அத்வானி பேசுகையில்,
நான் இதுவரை பல புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். அதில் இந்த புத்தகம் தனித்துவம் வாய்ந்தது. அரசு வெளியிட்ட அறிக்கைக்கு உபதலைப்பிட்டு மறு புத்தகமாக இரா. செழியன் வெளியிட்டுள்ளார்.
1975 முதல் 77 வரை நடந்த நிகழ்வுகளை பலர் மறந்து விட்டனர். அந்த வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பித்து மீண்டும் தந்துள்ளார். உலக அளவில் மிகச்சிறந்த ஜன நாயக நாடாக இருப்பதால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நெருக்கடி நிலை கொண்டு வந்த காரணத்தினால் காங்கிரஸ் மாபெரும் தோல்வியை சந்தித்தது. இந்தியா முழுவதும் அரசுக்கு எதிராக மக்கள் கோபத்துடன் திரண்டனர். இன்றும் அதே நிலைமை மக்களிடம் உருவாகி உள்ளது.
விலைவாசி உயர்வு, ஊழலுக்கு எதிராக மக்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள். ஊழல் அதிகரித்து வருவது மக்களை விரக்தி அடைய வைத்துள்ளது. பெரும் சமூக சீர்கேடாக அது மாறி வருகிறது.
ஊழலை ஒழிக்காவிட்டால், ஊழலற்ற அரசியலை உருவாக்காவிட்டால் அமைதி பறி போய் விடும். நாடு சீர்குலைந்து போய் விடும். நாட்டின் வளர்ச்சிக்கே பெரும் சவாலாக மாறியுள்ளது ஊழல்.
ஊழலுக்கு எதிராக பாடுபட்ட, பாடுபட்டு வரும் கட்சியைச் சேர்ந்தவன் நான். ஊழலுக்கு எதிராக கடுமையாக போராடியவன். பண வீக்கத்தைப் போல ஊழலும் தற்போது சாமானிய மக்களுக்கு பெரும் துயரத்தை அளித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக நாட்டில் உள்ள அரசியல் சாசன அமைப்புகளும் ஊடகங்களும் ஊழலை முன்னிலைப்படுத்தி வருகின்றன. சுப்ரீம் கோர்ட், பாராளுமன்றம், ஊடகங்கள் அனைத்திலும் இவைகள் முக்கிய இடம் பிடித்துள்ளன.
காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பதுதான். கடந்த பாராளுமன்ற கூட்டத்தில் இந்த பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. ஊழலுக்கும் விலைவாசிக்கும் எதிராக மக்கள் எந்த அளவு கொந்தளித்து போய் இருக்கிறார்கள் என்பது எதிரொலித்தது.
இந்த பிரச்சினையை மக்கள் மத்தியில் பிரசாரமாக கொண்டு செல்ல இருக்கிறோம். முழுமையாக இந்த பிரச்சினைகளுக்கு முடிவு காணாவிட்டால் நாட்டில் அமைதி சீர்குலையும். எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்று இணைந்து முடிவு காண வேண்டும் என்றார் அத்வானி.
-
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold Price: தங்கம் விலை இன்று சரிந்தது.. சவரனுக்கு ரூ.800 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் ரேட் என்ன? -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை












Click it and Unblock the Notifications