ஆந்திர சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம்: காங்கிரஸ் அரசு தப்புமா?

ஆந்திர விவசாயிகளின் பிரச்சனையை முன் வைத்து தெலுங்கு தேசம் கட்சியால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை ஆதரித்துள்ளன.
காலையில் ஆந்திர அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. விவாதம் முடிந்ததும் ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
மொத்தம் 294 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஆந்திர சட்டசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் தற்போது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 287 ஆகும்.
144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு தப்பும்.
இதில், மொத்தமுள்ள 153 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 17 பேர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் ஆவர். முதலில் அவருடன் 21 எம்எல்ஏக்கள் இருந்தனர். இதில் 4 பேர் மீண்டும் காங்கிரஸ் பக்கம் தாவி விட்டனர்.
அதே நேரத்தில் அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் அரசை எதிர்த்து வாக்களித்தால் ஆட்சி பறிபோகலாம்.
ஆனாலும், நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி காங்கிரஸை ஆதரிக்கிறது. இந்தக் கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களில் பெண் எம்.எல்.ஏ. ஷோபா நாகிரெட்டி, ஜெகன்மோகன் அணியில் சேர்ந்து விட்டார். அவர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். இதனால், 17 பேர் தான் சிரஞ்சீவி கட்சியில் உள்ளனர்.
அவர்களுக்கு காங்கிரஸ் அமைச்சர் பதவி தராததால் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் சிரஞ்சீவியே சொன்னாலும் கூட அவர்கள் ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கும் சூழ்நிலை உள்ளது. இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தி ஆட்சியை ஆதரித்து வாக்களிக்கச் செய்யும் முயற்சியில் ஆந்திர காங்கிரஸ் தலைவர் சத்யநாராயணா, முதல்வர் கிரண்குமார் ரெட்டி மற்றும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களான குலாம்நபி ஆசாத், அகமத் படேல் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் தரப்படும் என சிரஞ்சீவியிடம் இவர்கள் உறுதிமொழி அளித்துள்ளனர்.
ஆந்திர சட்டசபையில் தற்போது அரசுக்கு ஆதரவாக 161 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாகவும் இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் காங்கிரஸ் அரசு வெற்றி பெறும் என்றும் நம்பப்படுகிறது.
ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமானால், ஜெகன்மோகன் ரெட்டிக்கு 40 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்க வேண்டும், சிரஞ்சீவி கட்சியினரில் பெரும்பாலோனார் எதிர்த்து வாக்க்களிக்க வேண்டும். இந்த இரண்டுமே நடக்க வாய்ப்பில்லை என்பதால் அரசு தப்பிவிடும் என்றே தெரிகிறது.
-
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications