விலையில்லா அரிசித் திட்டம் தொடர்கிறது- வதந்திகளை நம்பாதீர்:- தமிழக அரசு
சென்னை: ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசித் திட்டம் தொடர்கிறது. இதுகுறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நல்லாட்சியின் மீது பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் கொண்டு ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும், மக்களின் கவனத்தை ஆட்சிக்கு எதிராக திசை திருப்பும் வகையிலும் தற்போது வழங்கப்பட்டுவரும் விலையில்லா அரிசிக்கு அரசு விலை நிர்ணயம் செய்யப் போவதாகவும், விலை நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டதாகவும், உண்மைக்கு மாறான, பொய்யான விஷம பிரசாரங்களை ஒரு சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர். இது உண்மையல்ல.
பிரதமருக்கு கடிதம்
இந்த திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தும் நோக்கத்துடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2011-12-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்த திட்டத்திற்கு ரூ.4500 கோடி மானியமாக ஒதுக்கியுள்ளார்கள். மேலும், தற்போது ரூ.400 கோடி கூடுதல் மானியம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் தற்பொழுது மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழக அரசிற்கு விலக்களிக்க வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பாரத பிரதமரை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து கிடைக்கும்
எனவே, பொது மக்கள் யாரும் விலையில்லா அரிசி தொடர்பான பொய்ப்பிரச்சாரங்கள் எதையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். பொய்ப்பிரச்சாரங்கள் மற்றும் வதந்திகளை பொய்யாக்குவதுடன், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற பொன்மொழியை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நலனில் என்றும் அக்கறை கொண்ட தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின், விலையில்லாத அரிசி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications