விலையில்லா அரிசித் திட்டம் தொடர்கிறது- வதந்திகளை நம்பாதீர்:- தமிழக அரசு
சென்னை: ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசித் திட்டம் தொடர்கிறது. இதுகுறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நல்லாட்சியின் மீது பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் கொண்டு ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும், மக்களின் கவனத்தை ஆட்சிக்கு எதிராக திசை திருப்பும் வகையிலும் தற்போது வழங்கப்பட்டுவரும் விலையில்லா அரிசிக்கு அரசு விலை நிர்ணயம் செய்யப் போவதாகவும், விலை நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டதாகவும், உண்மைக்கு மாறான, பொய்யான விஷம பிரசாரங்களை ஒரு சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர். இது உண்மையல்ல.
பிரதமருக்கு கடிதம்
இந்த திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தும் நோக்கத்துடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2011-12-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்த திட்டத்திற்கு ரூ.4500 கோடி மானியமாக ஒதுக்கியுள்ளார்கள். மேலும், தற்போது ரூ.400 கோடி கூடுதல் மானியம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் தற்பொழுது மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழக அரசிற்கு விலக்களிக்க வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பாரத பிரதமரை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து கிடைக்கும்
எனவே, பொது மக்கள் யாரும் விலையில்லா அரிசி தொடர்பான பொய்ப்பிரச்சாரங்கள் எதையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். பொய்ப்பிரச்சாரங்கள் மற்றும் வதந்திகளை பொய்யாக்குவதுடன், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற பொன்மொழியை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நலனில் என்றும் அக்கறை கொண்ட தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின், விலையில்லாத அரிசி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications