ஈராக் மீது போர் தொடுத்தது தவறான முடிவு: ஒபாமா

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அங்கு அதிபர் சதாம் ஹூசேன் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக பொய் கூறிக் கொண்டு போர் தொடுத்தார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.
ஆனால், அங்கு அணு ஆயுதங்களே இல்லை என்பது போர் தொடுத்த சில மாதங்களிலேயே தெரிந்துவிட்டது. இருப்பினும் சதாம் ஹூசேனை ஆட்சியிலிருந்து அகற்றும் பணியில் இறங்கி வெற்றியும் பெற்றார்.
பின்னர் போர்க் குற்றங்களைக் காரணம் காட்டி சதாம் தூக்கில் இடப்பட்டு கொல்லப்பட்டார்.
இந் நிலையில், போர் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஈராக் மீது போர் தொடுத்தது தவறான செயல் என்பதில் அதிபர் பராக் ஒபாமாவுக்கு மாற்றுக் கருத்தே இல்லை. அதே நேரத்தில் அமெரிக்கப் படைகளின் தியாகத்தால் ஈராக் இப்போது நல்ல நிலையில் உள்ளது, மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என்றார்.
ஈராக் தற்கொலைப் படை தாக்குதலில் 50 பேர் பலி:
இந் நிலையில் ஈராக் போர் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இன்று தலைநகர் பாக்தாத் மற்றும் ஷியா முஸ்லிம்கள் வாழும் மாவட்டங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாக்தாத்தில் பரபரப்பான மார்க்கெட்டில் கார் குண்டு வெடித்தது. பாக்தாத்தின் தெற்கு பகுதியில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் நகரில் போலீஸ் தளம் மீது தற்கொலைப்படை தீவிரவாதி குண்டுகள் நிரப்பிய டிரக்கை மோதி வெடிக்கச் செய்தான்.
இந்த தாக்குதல்களில் 50 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 160 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications