ஜருகண்டி, ஜருகண்டி: திருப்பதி கோவிலில் 'முனி' லாரன்சின் தாயை பிடித்து தள்ளியதால் பரபரப்பு

டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான லாரன்ஸ் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தாருடன் திருப்பதி வந்தார். நேற்று அதிகாலை 6.30 மணிக்கு அவர் வைகுண்டம் க்யூ காம்பிளக்ஸ் வழியாக கிரேடு 2 விஐபி தரிசனத்தில் குடும்பத்தாருடன் சென்று ஏழுமலையானை தரிசித்தார். சாமி தரிசனம் செய்தபோது அங்குள்ள ஊழியர்கள் ஜருகண்டி, ஜருகண்டி என்று கூறி லாரன்சின் தாய், மனைவி மற்றும் குழந்தையைப் பிடித்து தள்ளினர். இதில் ஆத்திரமடைந்த லாரன்ஸ் அந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து கோவில் ஊழியர்கள் சிலர் வந்து அவரை சமரசம் செய்து வைத்தனர்.
கோவிலில் இருந்து வெளியே வந்த லாரன்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எனது தாயாருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்க வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன். அவர் பூரண குணமடைந்தவுடன் சாமியை தரிசிக்க குடும்பத்துடன் இங்கு வந்தோம். சாமியை தரிசித்துக் கொண்டிருக்கையில் கோவில் ஊழியர் ஒருவர் எனது தாயை பிடித்து தள்ளிவிட்டார். இதில் அவர் கீழே விழுந்துவிட்டார். இது மரியாதை அல்ல கொடூரமான செயல் ஆகும். எனது குடும்பத்தை அவமானப்படுத்துவது போல் உள்ளது.
அதனால் தான் ஆவேசமாக பேசிவிட்டேன். இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு திருப்பதி கோவிலில் சிவப்பு கம்பளம் விரித்து மரியாதை அளிக்கிறார்கள். ஆனால் இந்தியாவை அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகரான என்னுடைய தாயை பிடித்து கீழே தள்ளியது தரக்குறைவான செயல் ஆகும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து ழுமலையான் கோவில் துணை அதிகாரிகள் சின்னம்காரி ரமணா, கேசவராஜு ஆகியோர் கூறுகையில்,
கோவிலில் கடந்த சில நாட்களாக கூட்டம் அதிகமாக உள்ளது. நடிகர் லாரன்ஸ் சாமியை தரிசிக்க வந்தார். விஐபி தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு கொடுக்கும் மரியாதையை அவருக்கும் கொடுத்தோம். ஆனால் அவர் செய்தியாளர்களிடம் கோவில் ஊழியர் மீது குறை கூறியிருப்பது சரியல்ல. அதுவும் செய்தியாளர்களிடம் குறை கூறியது தவறு. அவரது இந்த குற்றச்சாட்டால் கோவில் ஊழியர்கள் மனவேதனை அடைந்துள்ளனர் என்றனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications