சஞ்சய் காந்தியைக் கொல்ல 3 முறை முயற்சி நடந்தது - விக்கிலீக்ஸ்
டெல்லி: சஞ்சய் காந்தியைக் கொலை செய்வதற்கு மூன்று முறை முயற்சி நடந்தது என்று விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.
அமெரிக்க தூதரக தகவலை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
உ.பி.க்கு ஒருமுறை அவர் வந்தபோது மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொல்ல முயற்சிக்கப்பட்டது என்றும் அந்த அமெரிக்க கேபிள் தகவல் தெரிவிக்கிறது.

1976ல் துப்பாக்கிச் சூடு
1976ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க தூதரகம் அனுப்பிய கடிதத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியை அடையாளம் தெரியதா நபர் ஒருவர் கொலை செய்வதற்கு மிகவும் சாதுரியமான முறையில் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது. அவசர நிலை காலகட்டத்தில் இந்த முயற்சி நடந்துள்ளது.

3 முறை சுடப்பட்டார் சஞ்சய்
மேலும் அதில் கூறுகையில், ஆகஸ்ட் 30 அல்லது 31ம் தேதி இந்த தாக்குதல் நடந்தது. அப்போது சஞ்சய் காந்தியை மூன்று முறை அந்த நபர் சுட்டார். ஆனால் சஞ்சய் காந்தி பெரும் காயம் ஏதுமில்லாமல் உயிர் தப்பி விட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய உளவுத்துறையிடமிருந்து இந்தத் தகவல்களைப் பெற்றதாகவும் அமெரிக்க தூதர் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.

இது 3வது முயற்சியாம்
இதுகுறித்து உளவுத்துறையினரிடம் பேசியபோது சஞ்சய் காந்தியைக் கொல்ல நடந்த 3வது முயற்சி இது என்று தெரிவித்தனர். உ.பியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் மிகவும் நவீனமான துப்பாக்கியைப் பயன்படுத்தியிருந்தார் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது என்று அந்த கடிதம் கூறுகிறது.

சஞ்சய்க்கு எதிரிகள் ஜாஸ்தி
சஞ்சய் காந்தி தனது தாயாரைப் போலவே மிகவும் தைரியமானவர், அதிரடியாக, ஆணித்தரமாக செயல்படுபவர். இதனால் அவருக்கு எதிரிகளும் அதிகம் இருந்தனர் என்றும் அமெரிக்க தூதரின் கடிதம் சொல்கிறது.

விமான விபத்தில் மரணமடைந்த சஞ்சய் காந்தி
3 முறை கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பிய சஞ்சய் காந்தி 1980ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி டெல்லியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருக்கு வயது 33 தான். இந்திரா காந்தியின் அடுத்த வாரிசாக கட்சிக்குள் வெகு வேகமாக உருவெடுத்து வளர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் அவர் அகால மரணமடைந்தார்.

சஞ்சய் மரணத்தால் அரசியலுக்கு வந்த ராஜீவ்
சஞ்சய் காந்தியின் திடீர் மரணத்தால் அதுவரை விமானியாக இருந்து வந்த அவரது அண்ணன் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வர நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications