பாட்டிலுக்கு பத்து ரூபாய்.. 10 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்.. குடிமகன்கள் அதிரடி கேள்வி
சென்னை: மது பாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்ற புகாரின் பேரில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 டாஸ்மாக் ஊழியர்களை நிர்வாகம் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. பாட்டிலுக்கு (பாட்டிலே திரும்ப பெரும் திட்டத்தின் கீழ் பத்து ரூபாய் தவிர்த்து கூடுதலாக பத்து ரூபாய்) பத்து ரூபாய் அதிகமாக வாங்குவது என்பது தமிழ்நாடு முழுக்கவே இருக்கிறது எனவே தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் தயாராக உள்ளதா என குடிமகன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழ்நாடு முழுக்கவே பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும் நிகழ்வுக்காக பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் அதைவிடவும் கூடுதலாக பத்து ரூபாய் எல்லா டாஸ்மாக் கடையிலும் வசூலிப்பதாக புகார்களை குடிமகன்கள் கூறி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் கையும் களவுமாக மாட்டும் ஊழியர்கள், மொபைல் போனில் சிக்கும் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது . அவ்வப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் சில டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கியதாக சஸ்பெண்ட் செய்யப்படுவதும் நடக்கிறது. அப்படித்தான் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 10 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னையின் புறநகர் பகுதிகளான நசரத்பேட்டை, திருநின்றவூர், பட்டாபிராம் மற்றும் முகப்பேர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் இந்த முறைகேடு நடப்பதாகத் தெரியவந்தது.
நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை
இந்த புகார்களைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் நடத்திய ரகசிய ஆய்வில் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மது விற்றது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, விதிமீறலில் ஈடுபட்ட அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த 10 ஊழியர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
எச்சரிக்கை
"அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு ரூபாய் கூடுதலாக விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என டாஸ்மாக் நிர்வாகம் மீண்டும் எச்சரித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மற்ற டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம் இதை பார்த்த குடிமகன்கள் பலர், தமிழ்நாடு முழுக்கவே பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதல் விலைக்கு விற்பது தொடர்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர். அப்படித்தான் சஸ்பெண்ட் செய்வதாக இருந்தால் தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டியது இருக்கும் என்று குடிமகன்கள் சவால் விடுத்துள்ளனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications