விந்தியா பேசும்போதே குறுக்கே நபர்.. மைக் ரிப்பேர்.. திமுகவையும் திட்டணும்.. கடலூரில் செம டென்ஷன்
சென்னை: தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக நட்சத்திரப் பேச்சாளர் நடிகை விந்தியா பிரச்சார மேடைகளில் தீப்பொறி வீசும் பேச்சால் கவனம் ஈர்த்து வருகிறார்.. சிதம்பரம் முதல் கடலூர் வரை அவர் முன்வைக்கும் கடுமையான விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.. அதே நேரத்தில் நெய்வேலி பிரச்சாரத்தில் ஏற்பட்ட மைக் கோளாறு மற்றும் தொண்டருக்கு அவர் அளித்த எச்சரிக்கை வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளரும், கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான நடிகை விந்தியா தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தனது வசீகரமான பேச்சினாலும், ஆவேசமான விமர்சனங்களாலும் திமுகவைச் சாடி வரும் விந்தியா, செல்லும் இடமெல்லாம் அரசியல் களத்தை அதிர வைத்து வருகிறார். குறிப்பாகச் சிதம்பரம் மற்றும் கடலூர் மாவட்டப் பிரச்சாரங்களில் அவர் முன்வைத்த விமர்சனங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிரபல நடிகை விந்தியா
சிதம்பரம் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய விந்தியா, திமுக அரசின் இந்து அறநிலையத்துறை செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். "கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்குக் கோயிலில் என்ன வேலை?" என்ற நேரடி கேள்வியுடன் தன்னுடைய பேச்சை ஆரம்பித்து, இந்து அறநிலையத்துறை தற்போது ஸ்டாலின் வீட்டுச் சமையலறையாக மாறியுள்ளது என்றெல்லாம் குற்றம் சாட்டினார்.
சிதம்பரம் கோயில் சொத்துகளையும், அதன் நிர்வாக உரிமைகளையும் பறிக்க திமுக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அவர் வேதனை தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தில் முருகருக்கு எதிராக நீதிமன்றம் சென்றதைச் சுட்டிக்காட்டிய விந்தியா, அதற்கு அடுத்த நாளே முதலமைச்சர் ஸ்டாலின் கார் டயர் வெடித்ததை ஒரு குறியீடாகக் குறிப்பிட்டார்.
டென்ஷன் ஆன விந்தியா
"தமிழகத்தில் சைவத்துக்கும் வைணவத்துக்கும் சண்டையில்லை, இந்து - முஸ்லிம் இடையே சண்டையில்லை; ஆனால் இந்தச் சண்டைகளை எல்லாம் திமுக உருவாக்கப் பார்க்கிறது. மக்களின் உண்மையான பிரச்சனைகளை பேசாமல், "பாஜக வந்துவிடும்" என்று பூச்சாண்டி காட்டி திமுகவினர் ஓட்டு கேட்கிறது. இந்தத் தேர்தல் நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் இடையிலானப் போராட்டம்" என்றெல்லாம் விந்தியா முழங்கினார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காடாம்புலியூர் சந்திப்பில் விந்தியா உரையாற்றியபோது, விந்தியாவுக்கு சோதனையாக பல தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன.
அதாவது அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனை ஆதரித்து அவர் பேசிக்கொண்டிருந்தபோது, மைக் திடீரென வேலை செய்யாமல் போய்விட்டது... ஒருபுறம் திமுக அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சாடிக்கொண்டிருக்க, மறுபுறம் மைக் கோளாறு ஏற்பட்டதுமே விந்தியாவின் டென்ஷன் அதிகமாகிவிட்டது.. முக்கியமான அரசியல் கருத்துகளைப் பேசும் நேரத்தில் ஏற்பட்ட இந்தத் தடையால் அவர் மிகுந்த எரிச்சலுக்கு ஆளானார்.
தொண்டருக்கு வார்னிங்
மைக் கோளாறு ஒருபுறம் இருக்க, வாகனத்தின் அருகே நின்றிருந்த அதிமுக தொண்டர் ஒருவர் விந்தியா பேசுவதை சரியாக கவனிக்காமல், அவர் பேசும்போதே குறுக்கே பேசிக்கொண்டே இருந்துள்ளார்., அதுவும் விந்தியாவின் அருகில் நின்றுக்கொண்டு அந்த தொண்டர், தன் இஷ்டத்துக்கு பேசி கொண்டேயிருந்தார்.. இதனால் செம ஆத்திரமடைந்த விந்தியா, தன்னுடைய பேச்சை சட்டென நிறுத்திவிட்டு, அந்தத் தொண்டரை நோக்கி, "நான் பேசும்போது குறுக்கே பேசக்கூடாது, அதற்கு ஒரு மரியாதை இருக்கிறது" என்று மேடையிலேயே பகிரங்கமாக எச்சரித்தார்.
கடலூர் பாரதி சாலையில் எம்.சி. சம்பத்தை ஆதரித்துப் பேசும்போதும் இதே போன்ற அதிரடியைத் தொடர்ந்தார். ஒரு முதிர்ச்சியான அரசியல் பேச்சாளராகத் தனது கருத்துகளில் உறுதியாகவும், அதே சமயம் பிரச்சாரக் களத்தில் ஏற்படும் ஒழுங்கீனங்களைக் கண்டிப்பதிலும் விந்தியா காட்டிய வேகம், இந்தத் தேர்தல் களத்தில் அவரது "டென்ஷன்" வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வைரலாக்கி கொண்டிருக்கிறது..!!
-
“எடப்பாடி உடன் சேர்த்து வைத்தது பாஜக தான்.. எல்லாம் அமித் ஷா முயற்சியால் நடந்தது” - டிடிவி தினகரன் -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி! -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
அதிமுக 167 வேட்பாளர்கள்.. எந்தெந்த சமூகத்திற்கு எவ்வளவு முன்னுரிமை? - முழு விவரம் இதோ! -
தேமுதிகவில் விலகிய கையோடு.. அதிமுகவில் இணைந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன்.. என்ன நடந்தது? -
11% வாக்கு வித்தியாசம்.. திமுக 200+ கண்டிப்பாக வரும்! சர்வே சொல்லும் ரகசிய தகவல்.. கவனிச்சீங்களா! -
ஸ்டாலின், விஜய் தொகுதிகளை விடுங்க.. ரெக்கார்டு படைக்கும் கரூர்.. தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள்! -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
திடீரென எகிறிய கிரேஸ்.. வன்னியர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அதிமுக? லிஸ்டை கவனிச்சீங்களா? -
வேலூர் தொழில் அதிபர்களால் ட்விஸ்ட்.. ஜோலார்பேட்டையில் கேசி வீரமணிக்கு கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது -
எஃகு கோட்டையாக நிற்கும் எடப்பாடி தொகுதி.. இங்கு எப்போதும் அதிமுகவின் ஆட்டம் தான்! கடந்து வந்த பாதை -
கண்டுகொள்ளாத அதிமுக 2ம் கட்ட நிர்வாகிகள்.. கலக்கத்தில் ராம ஸ்ரீனிவாசன்.. கொடி பிடிக்க கூட வரலையாம்!












Click it and Unblock the Notifications