விவசாயிகள் கவனத்திற்கு! மழை ஆரம்பிச்சிருச்சு.. இந்த நேரத்துல இதை செய்யாதீங்க! அரசு அன்பான வேண்டுகோள்
சென்னை: பருவமழை துவங்கிவிட்டதாலும், வெயில் குறைந்து, மேகமூட்டமாக உள்ளதாலும், பயிரின் தேவைக்கு அதிகமாக விவசாயிகள் உரமிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், உரம் தொடர்பான புகார்களை 9363440360 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவோ வாய் மொழியாகவோ விவசாயிகள் தெரிவிக்கலாம் என அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

ரசாயன உரங்கள்
நடப்பாண்டில் தமிழகத்தில் நிலவும் சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பயிர் சாகுபடிக்குத் தேவையான இரசாயன உரங்களை முன்னரே கணித்து, போதுமான அளவுக்கு இரசாயன உரங்களை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் உரத்துறையினை வலியுறுத்தியதன் காரணமாக, தற்சமயம், தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 94,377 மெட்ரிக் டன் யூரியா, 48,060 மெட்ரிக் டன் டிஏபி, 35,255 மெட்ரிக் டன் பொட்டாஷ், 1,71,156 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு உள்ளது.

நவம்பர் மாத உர ஒதுக்கீடு
பயிர் சாகுபடியினை முன்னரே கணித்து, அதிகரித்து வரும் உரத்தேவையினை ஒன்றிய அரசுக்கு தெரிவித்ததன் காரணமாக, நவம்பர் மாதத்தில், 1,46,720 மெட்ரிக் டன் யூரியா, 32,260 மெட்ரிக் டன் டிஏபி, 29,000 மெட்ரிக் டன் பொட்டாஷ், 78,350 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தமிழகத்திற்கு வழங்க ஒன்றிய அரசின் உரத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் நாட்களில் புயல், மழை அதிகமாக இருக்கும் என்பதால், உரம் விநியோகம் பாதிக்காதவாறு, இறக்குமதி செய்யப்படும் உரங்களை தூத்துக்குடி, மங்களூர் துறைமுகங்கள் மூலமாக தமிழகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

புகாருக்கு உதவி மையம்
மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் உர விநியோகம் சீராக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி, சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் உர உதவி மையம் அமைக்கப்பட்டு, வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கி வருகிறது. உரம் தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால், விவசாயிகள் 9363440360 என்ற எண்ணை Whatsapp மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ தெரிவிக்கலாம்.

மண் ஆய்வு
தற்போது, பருவமழை துவங்கிவிட்டதாலும், வெயில் குறைந்து, மேகமூட்டமாக உள்ளதாலும், பயிரின் தேவைக்கும் அதிகமாக விவசாயிகள் உரமிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிக உரமிட்டால், செலவு அதிகமாகும் என்பதுடன், பூச்சி, நோய் தாக்குதல் ஏற்பட்டு, மகசூல் குறையலாம் என்பதால், மண் ஆய்வின் அடிப்படையிலோ அல்லது துறை அலுவலர்களின் பரிந்துரைப்படி உரமிட்டு, விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications