NDA கூட்டணிக்கு தேமுதிக வருதா? தேதியைச் சொன்ன நயினார் நாகேந்திரன்.. என்ன மேட்டர்?
சென்னை: "என்.டி.ஏ கூட்டணியில் தேமுதிக இணையுமா? என்ற கேள்விக்கு "1 ஆம் தேதி பார்க்கலாம்" என நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பொதுக்கூட்டம் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நயினார் நாகேந்திரனின் இந்த பதில் அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இதனால் திமுக கூட்டணிக்கு செல்லுமா? இல்லை மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா? என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தேமுதிகவை பொறுத்தவரை, இரட்டை இலக்கத்தில் சட்டசபை தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா இடம் உள்ளிட்டவற்றை பிரேமலதா விஜயகாந்த் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. மேலும், என்டிஏ கூட்டணியில் மத்திய அமைச்சர் பதவியையும் தேமுதிக கேட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என அக்கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா மையத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம் பெறலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுக கூட்டணி தான் வலுவாக இல்லை. எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல கூட்டணி கட்சிகளால் பாஜக பலமாக உள்ளது. இபிஎஸ் தலைமையில் நல்லாட்சி மலரும்" என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
என்.டி.ஏ கூட்டணியில் தேமுதிக இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "மார்ச் 1 ஆம் தேதி பார்க்கலாம்" என்று பதில் அளித்துள்ளார். நயினார் நாகேந்திரனின் இந்த பதில் அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்.எடி.ஏ பொதுக்கூட்டம் வரும் மார்ச் 1ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அப்போது கூட்டணி தொடர்பான அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் மோடி மார்ச் 1 ஆம் தேதி தமிழகம் வர உள்ள நிலையில், அப்போது மதுரையில் நடக்கும் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் மேடை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
-
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே?












Click it and Unblock the Notifications