10 ஆண்டு மர்மம்.. ராமஜெயத்தை கொன்றது யார்? பரபர திரில்லர் - நாளை 12 ரவுடிகளிடம் உண்மை அறியும் சோதனை
சென்னை: தமிழ்நாடு அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு திருச்சியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து விசாரணை சூடுபிடித்து இருக்கும் நிலையில், இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் 12 ரவுடிகளிடம் நாளை உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின் இளைய சகோதர் தொழிலதிபர் கே.என். ராமஜெயம்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி காலை இவர் திருச்சியில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரின் திருச்சி - கல்லணை சாலையில் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்படாத கொலையாளிகள்?
இந்த கொலை தொடர்பாக சிபிசிஐடி, சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே தமிழ்நாடு போலீசாரே மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டது. பெரும் பரபரப்பை உண்டாக்கிய இந்த கொலை வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், டி.எஸ்.பி. மதன்குமார் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது.

தீவிர விசாரணை
இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளாக ராமஜெயத்தை கொன்ற கொலையாளி யார், அவர் கொல்லப்பட்டதற்கான நோக்கம் என்ன என்ற எதுவும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ராமஜெயம் கொலை வழக்கை தீவிரமாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரிக்க தொடங்கி உள்ளார்கள்.

12 ரவுடிகள்
இந்த கொலை வழக்கில் திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், சாமி ரவி, மாரிமுத்து, சீர்காழி சத்யராஜ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தினேஷ், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 ரவுடிகளை சந்தேகப் பட்டியலில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களில் சிலரிடம் கடந்த சில மாதங்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

திருச்சி நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த திருச்சி நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் 12 ரவுடிகளுக்கும் இரண்டு மாதத்திற்குள் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் நாளை 12 ரவுடிகளிடமும் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

நாளை உண்மை கண்டறியும் சோதனை
சென்னையில் நாளை முதல் 21 ஆம் தேதி வரை 12 ரவுடிகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் டெல்லிக்கு சென்று உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்வதற்கான தேதியை கேட்டுப் பெற்று வந்து உள்ளனர்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications