டிரைவருக்கு திடீர் வலிப்பு நோய்.. சைன்போர்டு தூணில் மோதிய அரசு பஸ்.. கத்திப்பாராவில் நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் கிண்டி கத்திபாரா அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் பலியான விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாம்பரத்திலிருந்து சென்னை கிண்டி கத்திபாரா செல்லும் வழியில் ஆலந்தூரில் ஒரு வழிகாட்டும் பலகை உள்ளது. இந்த பலகையில் பூந்தமல்லி, கிண்டி, கோயம்பேடுக்கு எப்படி போவது என்பது குறித்து பெரிய அளவிலான பலகை வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த பகுதியில் கூட்ட நெரிசல் இல்லாமல் இருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடி இல்லாததால் அவ்வழியாக ஒரு அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது.

பேருந்து ஓட்டுநர்
அப்போது அந்த பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. உடனே சாலை வழிகாட்டும் பலகை நிறுவப்பட்டுள்ள இரும்பு கம்பியில் வேகமாக மோதியது. இதில் அந்த கம்பி பெயர்ந்து பலகை சரிந்து விழுந்தது.

பைக் மீது பலகை
அப்போது அவ்வழியாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது பலகை விழுந்தது. இதில் பயணம் செய்த இருவரில் ஒருவர் பலியாகிவிட்டார். இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே பேருந்து கம்பத்தில் மோதியதில் அதன் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்தது.

3 பேர் காயம்
பேருந்தில் இருந்தவர்கள் வேகமாக இறக்கப்பட்டு மாற்று பேருந்தில் அனுப்பப்பட்டனர். பேருந்து ஓட்டுநரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டு மொத்தம் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உடனடியாக பலகைகள், இரு சக்கர வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

போலீஸ் விசாரணை
இந்த விபத்து குறித்து ஆலந்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. அது போல் பேருந்தின் நடத்துநரிடமும் போலீஸார் விசாரணை செய்கிறது. உண்மையில் ஓட்டுநருக்கு வலிப்பு நோய் வந்ததா என்பது குறித்து பேருந்தின் முன்பக்கம் இருந்த பயணிகளிடம் கேட்கப்பட்டு வருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications