கோர்ட்டில் புதிய தகவல்களை வெளியிட தயாராகிறாரா முருகன்?
Recommended Video

சென்னை: நிர்மலா தேவி கூறிய வாக்குமூலம் பொய் என்றும் நீதிமன்றத்தில் உண்மையை சொல்வேன் என்றும் முருகன் கூறியதை வைத்து பார்க்கும் போது அவர் புதிய தகவல்களை வெளியிட தயாராகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தன்னிடம் பயிலும் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல அவர்களை நிர்பந்தித்ததாக பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்தது முருகன், கருப்பசாமி கேட்டுக் கொண்டதாலேதான் என பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

பலிகடா
இந்நிலையில் முருகனின் பெயரை டேமேஜ் செய்யும் வகையிலும் நிர்மலா தேவியின் வாக்குமூலம் இருந்தது. எனினும் முருகனின் மனைவியோ யாரையோ காப்பாற்ற தன் கணவரை பலிக்கடாவாக்கப்பட்டுள்ளனர் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

எதிர்பார்ப்பு
நிர்மலா தேவியின் வாக்குமூலத்தை அறிந்த முருகனோ இந்த வாக்குமூலம் அனைத்தும் பொய்யானவை. நீதிமன்றத்தில் உண்மையை தெரிவிப்பேன் என கூறியுள்ளார். இதனால் இன்னும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் முருகன், நிர்மலாதேவி, கருப்பசாமி ஆகியோரை சுற்றி சுற்றியே கூறப்பட்டுள்ளது. மேலும் உண்மையான குற்றவாளிகள் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ரகசியங்கள்
இந்நிலையில் நீதிமன்றத்தில் உண்மையை கூறுவேன் என்று முருகன் கூறியுள்ளதை பார்க்கும் போது உண்மையான குற்றவாளிகள் குறித்து ஏதேனும் தகவல்களை அளிப்பாரா, அல்லது தன்னை டேமேஜ் செய்த நிர்மலா தேவி குறித்து சொல்லப்படாத ரகசியங்களை சொல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் நிர்மலா தேவி தான் யாருடனெல்லாம் நெருக்கமாக இருந்தேன் என்று வெளியிட்ட பட்டியலை வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படுமா.

உண்மைகள்
மேலும் இதற்கு முன்னர் நான் எந்த கல்லூரி மாணவிகளையும் இப்படி தவறான பாதைக்கு அழைத்ததில்லை என்று நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ள போதிலும் அதுகுறித்த உண்மைகளை முருகன் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு கொண்டு அளிக்கப்படும் வாக்குமூலத்தின் வாயிலாக உண்மை வெளியே வருமா என்றும் முக்கிய பெரும் புள்ளிகள் சிக்குவரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது! -
ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்? -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
மண்டமேல இருந்த கொண்டைய மறந்த ஓபிஎஸ்.. கேட்ல இருந்த இரட்டை இலைய எடுத்தீங்களே! வீடு? விளாசிய விந்தியா! -
Election Exclusive: சினேகனுக்கு அடிச்சது யோகம்! எட்டைக் கை காட்டிய கமல்! இரட்டை விரலை தூக்கிய ஸ்டாலின்! மநீம பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications