கேடுகெட்ட 'எட்டப்பன்'.. சேரை தூக்கிட்டு ஓடுனாரே! சூடு சொரணை இல்ல! மாஜிக்களை வெளுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்!
சென்னை : "கேபி முனுசாமி ஒரு எட்டப்பன். முனுசாமிக்கு அடையாளம் கொடுத்ததே ஓபிஎஸ் தான். ஜெயலலிதா இருக்கும் வரை முனுசாமியால் வெளியிலேயே வர முடியவில்லை. ஓபிஎஸ் போட்ட பிச்சையால் தான் அதிமுகவில் பதவி பெற்றார். இன்று எடப்பாடி பழனிசாமி அணியில் 'ஆமாஞ்சாமி' போட்டு பதவியை வாங்கிவிட்டு, ஓபிஎஸ்ஸை விமர்சிக்கிறார்" என ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் கடுமையாகச் சாடியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், தங்கள் பலத்தை நிரூபிக்க இரு தரப்புமே கடுமையாக முட்டி மோதி வருகின்றனர். இரு தரப்பினருமே ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், பரபரப்பான அதிமுக அரசியல் சூழலில் ஒன் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார், கேபி முனுசாமி உள்ளிட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனிக்கட்சி - ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, எடப்பாடி பழனிசாமி தனிக்கட்சி தொடங்குவாரா என சவால் விட்ட நிலையில், அதுபற்றி விமர்சித்த ஈபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவின் பி டீமாக இருந்துகொண்டு, தேவையில்லாத கருத்துகளைக் கூறி கட்சித் தொண்டர்களை குழப்புகின்ற வேலையை செய்து வருகிறார். அனைவருமே எடப்பாடியார் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளோம். எனவே, நாங்கள் எதற்கு தனிக்கட்சி தொடங்க வேண்டும். நாங்கள்தான் கட்சி. ஓபிஎஸ் வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து, அவருடைய பலத்தை அவர் காட்டட்டும் என விமர்சித்தார்.

ஜெயக்குமாருக்கு சூடு சுரணை இல்லை
இதுபற்றி ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ள ஓபிஎஸ் ஆதவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, "ஓபிஎஸ் ரேஞ்சுக்கு ஜெயக்குமார் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. மெரினாவில் நடந்த கூட்டத்தில் சசிகலாவை அமர வைப்பதற்காக ஜெயக்குமாரும், பொன்னையனும் சேரை தூக்கிக்கொண்டு ஓடினார்கள். தனது வேட்டியால் நாற்காலியால் துடைத்து, சசிகலாவை அமரச் சொன்னார் ஜெயக்குமார். இன்று சசிகலாவையும், டிடிவி தினகரனையும் ஏளனமாக விமர்சித்துப் பேசுகின்றனர். அவர்களின் தயவு இல்லாமல் தானாக முன்னேறி வந்தது போல பேசக்கூடாது. ஓபிஎஸ், கவுன்சிலர் தேர்தலில் கூட ஜெயிக்க முடியாது என்கிறார் ஜெயக்குமார். முதலில், நீங்கள் உங்கள் தொகுதியில் ஜெயிக்க முடிந்ததா? ஜெயக்குமாருக்கு சூடு சுரணை எதுவும் கிடையாது." என்றார்.

எடப்பாடியை பாஜக இயக்குகிறதா?
குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்குமே அழைப்பு வந்த நிலையில் ஓபிஎஸ் மட்டும் பங்கேற்றார். அங்கு, ஓபிஎஸ்ஸுக்கு பாஜக தலைவர்கள் சில அறிவுரைகளைச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு பின்னால் இருக்கும் முதலாளி சொல்வதைக் கேட்டு ஓபிஎஸ் நடக்கிறார் என எடப்பாடி தரப்பினர் விமர்சிக்கின்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, "ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்று வந்தாரே.. அப்படி என்றால் எடப்பாடியை பாஜக இயக்குகிறது என்று சொல்லலாமா? முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் பாஜக ஓபிஎஸ்ஸை அழைத்தது, அதன் அடிப்படையில் சென்று வந்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் பாஜகவிடம் சரண்?
ஓபிஎஸ், முழுமையாக பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாகவும், பாஜகவிடம் சரணடைந்து விட்டதாகவும் பாஜகவின் பேச்சைக் கேட்டே செயல்பட்டு வருவதாகவும் எழுந்து வரும் விமர்சனங்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த கிருஷ்ணமூர்த்தி, "பாஜகவின் கொள்கை வேறு, அதிமுகவின் கொள்கை வேறு. பாஜக தலைவர்களுடன் சந்திப்பது, கூட்டணி கட்சியின் தலைவர்கள் என்ற முறையில் தான். இந்தச் சந்திப்புகளை எல்லாம் அவர் பாஜக சொல்வதைக் கேட்கிறார் என்று முடிச்சுப் போடுவது தவறு." எனத் தெரிவித்துள்ளார்.

எட்டப்பன் - முனுசாமி
மேலும் பேசிய அவர், "கேபி முனுசாமி கேடுகெட்ட எட்டப்பன். முனுசாமிக்கு அடையாளம் கொடுத்ததே ஓபிஎஸ் தான். ஜெயலலிதா இருக்கும் வரை முனுசாமியால் வெளியிலேயே வர முடியவில்லை. ஓபிஎஸ் போட்ட பிச்சையால் தான் அதிமுகவில் பதவி பெற்றார். இன்று எடப்பாடி பழனிசாமி அணியில் 'ஆமாஞ்சாமி' போட்டு பதவியை வாங்கிவிட்டார். மேடையிலேயே சிவி சண்முகம் முனுசாமியை அப்படி திட்டுகிறார். சூடு சுரணை இல்லாமல் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறார். அவர் நடத்தும் குவாரி, பணம் தான் அவருக்கு முக்கியம். அதனால், எல்லாவற்றையும் துடைத்துப் போட்டுவிட்டு சுரணை கெட்டுப்போய்தான் ஈபிஎஸ் அணியில் இருக்கிறார்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications