முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகம்.. காணும் பொங்கலில் யாருமில்லாமல் காற்று வாங்கிய மெரினா கடற்கரை
சென்னை: முழு ஊரடங்கு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் முடங்கியது. சென்னை மெரினா கடற்கரை யாரும் இல்லாமல் காற்று வாங்கியது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 25,0000-ஐ தொட்டுள்ள நிலையில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஆக்டிவ் கேஸ்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் தினமும் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று மாநிலம் முழுவதும் தொடர்ந்து 2-வது வாரமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதுபோக இன்று காணும் பொங்கலாகும். வழக்கம்போல் காணும் பொங்கலில் மக்கள் ஆறுகள், கடல்கள் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம்.

காற்று வாங்கிய மெரினா
ஆனால் இந்த முறை அனைத்துக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கில் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். முழு ஊரடங்கு காரணமாக தலைநகர் சென்னை முடங்கியது. ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் மாநகரின் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. வழக்கமாக காணும் பொங்கல் அன்று லட்சக்கணக்கானோர் திரளும் சென்னை மெரினா கடற்கரை யாரும் இல்லாமல் காற்று வாங்கியது.

மதுரை, கோவை
எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை ராஜீவ் காந்தி சாலை வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் பயணிகள் வரத்து குறைவால் சென்னை சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் வழக்கமான பரபரப்பு இல்லை. சென்னை முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களிடம் இருந்து சுமார் 307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். முழு ஊரடங்கு காரணமாக சென்னைக்கு அடுத்த பெரிய நகரமான கோவையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தூங்கா நகரமான மதுரையில் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வேளாங்கண்ணி, நெல்லை, திருச்சி
விழுப்புரத்தில் 60 இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டத்தில் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட முக்கிய ஆன்மிக தலம் இருக்கும் பகுதிகளில் ஆட்கள் நடமாட்டமில்லை. இதேபோல் முக்கிய நகரங்களான திருச்சி, சேலம், ஈரோடு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், தஞ்சாவூர், கும்பகோணம் உள்பட தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.
Recommended Video

ஊட்டி, கொடைக்கானல்
இதேபோல் சுற்றுலா தலங்களான நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னுர், கோத்தகிரி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சேலம் மாவட்டம் ஏற்காடு, கன்னியாகுமரி, குற்றாலம், கல்லணை, ஒகேனக்கல் என அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கோவை, நாகர்கோவில், தென்காசி, நீலகிரி பகுதிகளில் கேரள எல்லை பகுதிகளிலும், கர்நாடகா மாநில எல்லை பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications