இனி எனக்கு எல்லாமே அரசியல் தான்.. தவெக வேட்பாளர்கள் நேர்காணலில் ஓபனாக பேசிய விஜய்
சென்னை: பனையூரில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்த 60 பேர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தினார். அப்போது பேசிய விஜய், "எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன்.. இனி அரசியலை தவிர வேறு ஒன்றும் இல்லை.. நான் அரசியலுக்கு வந்தபிறகு எனக்கு நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரியும்.. எதற்கும் துணிந்து வேலைகளை பாருங்கள்.." என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் இன்று முதல் வேட்பாளர் நேர்காணலை தொடங்கியுள்ளார். இன்று நேர்காணலில் பங்கேற்க வந்த வேட்பாளர்களிடம் விஜய் மனம் விட்டு பேசியதாகவும், அரசியல்தான் தனக்கு எல்லாம் எனவும் விஜய் கூறியதாக சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம்
தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள விஜய் வரும் சட்டசபை தேர்தல் தான் இலக்கு என அதற்காக வேலை செய்து வருகிறார். இதுவரை இல்லாத ஒரு தேர்தலாக இந்த 2026 சட்டசபை தேர்தல் இருக்கும் என்று விஜய் கூறி வருகிறார்.
தமிழம் முழுவதும் மக்கள் சந்திப்பை நடத்த பிளான் செய்த விஜய்க்கு கரூர் சம்பவம் பிரேக் போட்டது. பின்னர் ஜனநாயகன் படம் வந்த பிறகு பிரசாரத்தை தீவிரப்படுத்தலாம் என நினைத்த விஜய்க்கு அதிலும் பின்னடைவே ஏற்பட்டது. ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சினையால் தற்போது வரை ரிலீஸ் ஆகாமல் போனது.
தன்னுடன் கூட்டணிக்கு வரும் கட்சிக்கு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று சொல்லி வந்த விஜய்க்கு அதிலும் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. கடைசியில் காங்கிரசை நம்பி இருந்த விஜய்க்கு அதிலும் ஏமாற்றம் தான். இதனால் 2026 சட்டசபை தேர்தலில் தனித்து விடப்பட்டுள்ளார். இந்த சூழலில் தான் மகளிர் தினத்தை ஒட்டி மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.
ஐந்து ஐந்து பேரை அழைத்து நேர்காணல்
இதையடுத்து தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட கடந்த மாதம் விருப்பமனுக்களை பெற்றிருந்த நிலையில் அவர்களில் 60 பேரிடம் இன்று நேர்காணல் நடத்த விஜய் முடிவு செய்திருந்தார். இதன்படி சிபிஐ விசாரணைக்கு விலக்கு கேட்டுவிட்டு திட்டமிட்டப்படி வரும் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த 60 பேரிடம் விஜய் இன்று பனையூர் அலுவலகத்தில் நேர்காணல் நடத்தினார்.
வேட்பாளர் தேர்வில் விஜய்யே களமிறங்கி இருப்பது தவெக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதாவது ஒரு தொகுதிக்கு 3 பேரை விஜய் நேர்காணல் நடத்த அழைத்து இருக்கிறார். பிப்ரவரி மாதம் பெறப்பட்ட விருப்ப மனுக்களில் இருந்து ஏற்கெனவே 50 வேட்பாளர்களை விஜய் இறுதி செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஐந்து ஐந்து பேரை அழைத்து விஜய் நேர்காணல் நடத்தியுள்ளார். நேர்காணல் நடத்தியபோது விஜய் சிலவற்றை பேசியதாகவும் கூறப்படுகிறது.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து இருக்கிறேன்
குறிப்பாக, "எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன்.. இனி அரசியலை தவிர வேறு ஒன்றும் இல்லை.. நான் அரசியலுக்கு வந்தபிறகு எனக்கு நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரியும்.. எதற்கும் துணிந்து வேலைகளை பாருங்கள்.. உங்களை வேட்பாளராக தேர்வு செய்து இருக்கிறேன்.. வெற்றி பெறுவதற்காக உழைப்பீர்கள் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எனக்கு நம்பிக்கையாக இருப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.. உங்கள் தொகுதியில் நீங்கள் வெற்றி பெறுவது உங்கள் கடமை.. உங்கள் பொறுப்பு.. அதற்கு ஏற்ப வேலைகளை செய்யுங்கள்.." என்று பேசியதாக கூறப்படுகிறது. மேலும் பூத் கமிட்டிகளை சரியாக அமைத்து இருக்கிறார்களா? என்பது குறித்தும் விஜய் வேட்பாளர்களிடம் நேரடியாகவே கேட்டு உறுதி செய்துள்ளார்.
மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு
முன்னதாக சென்னையில் தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் (தியாகராய நகர்), அருண்ராஜ் (திருச்செங்கோடு), ராஜ்மோகன் (எழும்பூர்), மரிய வில்சன் (திருவொற்றியூர்) ஆகியோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட 50 வேட்பாளர்களையும் தங்கள் தொகுதியில் பணிகளைத் தொடங்குமாறு விஜய் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது விஜய்க்கு அரசியலில் பெரும் அடியை கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த விவாகரத்து பிரச்சினை வொர்த் இல்லை என்று கூறியது அவரது கட்சி பெண் நிர்வாகிகள் மத்தியிலேயே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உங்களை பார்த்து தானே உங்கள் ரசிகர்களும், தொண்டர்களும் இருப்பாங்க.. அப்படி இருக்கையில் நீங்களே இப்படி பேசலாமா என்றும் கூறியிருந்தனர்.
வீட்டிலேயே பெண்களை பாதுகாக்க தெரியாதவர் எப்படி முதல்வர் ஆகி பெண்களுக்கு பாதுகாப்பை கொடுப்பார் என்றும் பலரும் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். இதேபோல் பாஜக ஒரு பக்கம் ஜனநாயகம் படம் மற்றும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐயை வைத்து நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் வேட்பாளர்களுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் விஜய் இப்படி பேசியதாக பார்க்கப்படுகிறது.
-
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்! -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
"நேர்காணல் கூட இல்லை.." விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் போதே போராட்டத்தில் இறங்கிய தவெகவினர் -
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
கூட இருந்தவரை ஆனந்த கண்ணீர் விட வைத்த விஜய்! தவெக மேடையில் அரங்கேறிய காட்சிகள்? யாரிந்த சபரிநாதன்? -
கலைஞரே 2 தொகுதில போட்டி போட்டு இருக்கார்.. யூடியூபர் பிரசாந்த் சொன்ன புது மேட்டர்.. உண்மை என்ன? -
ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே? புகையுது தவெக? ரூ.100 கோடி பிராமிஸ் தந்த அந்த விஐபி யார் -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி












Click it and Unblock the Notifications