விஜய்க்கு இப்படியா சோதனை வரனும்! பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள்.. குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய்
சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த உள்ளன. ஏப்.20ம் தேதி மொத்த தமிழ்நாடும் அரசியல் களத்தில் சூடாக இருக்கும். ஆனால், விஜய்யின் மனைவி சங்கீதா கொடுத்த புகார் தொடர்பான விசாரணைக்கு அவர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பார் என்று சொல்லப்படுகிறது.
இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், விஜய் டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். அரசியல் தலைவர்கள் தேர்தல் தேதியை எதிர்பார்த்து களத்தில் இருந்தனர். ஆனால், விஜய் மட்டும்தான் டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார். இப்படி இருக்கையில், பிரச்சாரத்தின்போதும் விஜய் இருக்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது.

விஜய்யின் அரசியல் பயணம்
திராவிட கட்சிகளுக்கு எதிராக விஜய் தீவிரமாக களமாடி வருகிறார். தனது அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் கூறி வரும் விஜய், இதுவரை பாஜகவை கடுமையாக விமர்சிக்கவில்லை. இப்படியாக திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த அவர், கரூர் நெரிசல் வழக்கில் சிக்கியிருக்கிறார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டதே விஜய்தான்! ஆனால், விசாரணைக்காக கடைசியில் விஜய்தான் அலையவிடப்பட்டு வருகிறார். இதற்கிடையில் விஜய் மீதான விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருகிறது.
கள்ளத்தொடர்பு விஷயத்தில் சிக்கிய விஜய்
விஜய் திருமணத்தை மீறி, ஒரு நடிகையுடன் உறவில் இருக்கிறார் என்றும், எனவே அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் எனவும் அவரது மனைவி சங்கீதா குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவில் விஜய் தன்னை துன்புறுத்துவதாகவும், நடிகையுடன் இருக்கும் உறவு குறித்து கேட்டால் பொருளாதார ரீதியாக தன்னை தனிமைப்படுத்துவதாகவும் தெரிவிதிருந்தார். மட்டுமல்லாது போதை பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.
விஜய்க்கு பின்னடைவு
இது விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பின்னடைவு குறித்து விஜய் இதுவரை வாய் திறக்கவில்லை. இப்படி இருக்கையில் தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பாஜகவுடன் கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி ஒன்று நடந்தால், அது விஜய்க்கு மிகப்பெரிய பேக் ஃபயரை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
பிரச்சாரத்தில் தலைவர்கள்.. நீதிமன்றத்தில் விஜய்
இந்த பஞ்சாயத்துகளுக்கு இடையில்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்.23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். ஏப்.20,21ம் தேதிகளில் தலைவர்கள் தீயாக பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில்தான் விஜய்யின் விவாகரத்து வழக்கு, குடும்பல நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. எனவே அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தில் இருக்கும்போது, விஜய் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பார் என்று பேசப்பட்டு வருகிறது. அப்படி மட்டும் நடந்தால் விஜய்யின் ரசிகர்கள் டென்ஷன் ஆகிவிடுவார்கள்.
ஆனால், தனது வழக்கறிஞர் மூலம் விஜய், விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கோர வாய்ப்புள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
ரஜினிகாந்த் திருந்திவிட்டார்.. விஜய் கட்சியை கலைத்துவிட்டு சென்றால் நல்லது - அமீர் -
Vijay Affidavit: குடும்பத்திற்கே கடன் கொடுத்த ஒருவரை பார்த்ததே இல்லை! விஜய் மீது முத்தரசன் தாக்கு! -
விஜய்க்கு ஓட்டு போட மாட்டியா? பெற்றோரின் SIR படிவத்தை வேண்டுமென்றே சமர்பிக்காமல் வைத்த மகன்! -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
தேர்தல் தேதி கூட தெரியலையே.. இவர் தான் தவெக வேட்பாளராம்.. ஒரே அவமானமா போச்சே












Click it and Unblock the Notifications