Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளியை வைத்தே ஸ்கோர் செய்த ஓபிஎஸ்! ஷாக் இபிஎஸ்! கவசத்தை செய்து கொடுத்தது இவரா? மாஸ் காட்டிய வாரிசு

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் அணிவித்ததற்கு இணையாக தற்போது ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கவசம் தந்திருப்பது தென் மாவட்டங்களில் பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் இதனை செய்தது யார் இதற்குப் பின்னணியில் இருந்தது யார் என்பது குறித்தான தகவல்களை தற்போது பார்க்கலாம்.

அதிமுகவில் அதிகார மோதலில் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பொருட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியை எதிர்நோக்கி இருந்தனர் அதிமுகவின் ஒரு தரப்பினரும்..

ஆனால் நீதிமன்ற தீர்ப்பு இரு தரப்பிற்குமே சாதகமாக வராத நிலையில் எடப்பாடியும் ஒதுங்கிக் கொள்ள திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார் உள்ளிட்ட மாஜிக்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினர்.

வெள்ளிக் கவசம்

வெள்ளிக் கவசம்

ஆனால் அதிமுகவின் பொருளாளரும் ஒருங்கிணைப்பாளரும் தான் எனக் கூறிவரும் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவு பட்டாளத்தோடு பசும்பொன்னில் மாஸ் காட்டினார். மேலும் யாரும் எதிர்பாராத வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு வருடத்தின் அனைத்து சுப நாட்களிலும் அணிவிக்கும் வகையில் வெள்ளி கவசத்தையும் வெள்ளி ருத்திராட்ச மாலையும் வழங்கினர். இதனால் எடப்பாடி தரப்பினரே கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் கவசம் செய்து கொடுத்தது யார் அதற்குப் பின்னணியில் மூளையாக செயல்பட்டது யார் என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கவசம் செய்யும் பணியில் ஈடுபட்டது ஓபிஎஸ் இன் மகனான ஜெயபிரதீப் என்பது தெரிய வந்திருக்கிறது.

ஜெய பிரதீப்

ஜெய பிரதீப்

வெள்ளிக் கவசத்துடன் ஓ.பன்னீர் செல்வமும் ரவீந்திரநாத் குமார் எம்பியும் உற்சாகமாக போஸ் கொடுத்த நிலையில் அதனை செய்து கொடுத்த ஜெயப்பிரதீப் தனியே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெள்ளிக்கவசம் உருவானது எப்படி அதனை செய்தது யார்? என்பது குறித்து ஜெயப்பிரதீப்பே கூறியிருக்கிறார். இது குறித்து அவரது முகநூல் பக்கத்தில்," மனிதனை ஒழுக்கத்தால் மட்டுமே உயர்ந்தவர் என்று மரியாதை கொடுக்க வேண்டுமே தவிர சாதி மற்றும் பணத்தால் அல்ல" என்று குரல் கொடுத்து வாழ்ந்து காட்டிய பசும்பொன் சித்தர் ஐயா உ.முத்துராமலிங்கத் தேவர்.

 ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

அவர்களின் 60-வது குருபூஜை நாளான இன்று மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் திருமகனார் நினைவிடத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் இதர சுப நாட்களில் வெள்ளிக்கவசம் அணிவிக்கும் பொருட்டு 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட காப்பாளர் திருமதி ந.காந்திமீனாள் அம்மையார் அவர்களிடம் ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கி மரியாதை செலுத்தினார்கள்.

பாராட்டு

பாராட்டு

தேசியத்தலைவர் ஐயா உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் வெள்ளிக் கவசம் மிக நேர்த்தியாக சிறப்பாக உருவாக வேண்டுமென பாக்கியம் வாய்ந்த அப்பணியை எனக்கு வழங்கிய உயர்திரு ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு, வெள்ளிக்கவசம் செய்வதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த தேவர் ஆலய நிர்வாக பொறுப்பாளர்களுக்கும், மிக அழகாக கவசத்தை உருவாக்கிய ஸ்தபதி அவர்களுக்கும், வெள்ளி கவசம் உருவாவதற்கு என்னோடு பயணித்து முழு உழைப்பை கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். " என கூறியிருக்கிறார். இதன் மூலம் அப்பணியை ரகசியமாக மட்டுமல்லாது சிறப்பாகவும் செய்ததற்கு அவரை பாராட்டியிருக்கிறார் ஓபிஎஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+