2 நாளா எதுவுமே சொல்லலையே! ஆட்டி வைத்த எடப்பாடி.. அதிர்ந்து நின்ற பாஜக! விரைவில் 2ல் ஒன்று நடந்துடும்
சென்னை: அதிமுக பொன்னையன் பாஜக பற்றி கூறிய கருத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசியல் உலகில் கடந்த இரண்டு நாட்களாக பொன்னையன் சொன்ன கருத்துதான் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவை நேரடியாக சீண்டி பொன்னையன் பேசியது, பாஜக தரப்பை பதற வைத்துள்ளது.
பாஜக தன்னை எதிர்க்கட்சி போல காட்ட நினைக்கிறது என்று சரமாரி குற்றச்சாட்டுகளை அதிமுக அமைப்புச்செயலாளர் பொன்னையன் அதிமுக ஐடி விங் கூட்டத்தில் பேசி இருந்தார்.

பாஜக எதிர்ப்பு
பாஜக தன்னை எதிர்க்கட்சி போன்று மக்கள் முன்னிலையில் முன்னிறுத்துகிறது. அதற்கான பிம்பத்தை பாஜக ஏற்படுத்துகிறது. அதை நம்முடைய ஐடி விங் நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும். இதற்காக நம்முடைய ஐடி விங் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வர நினைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாடு இன, மொழி, திராவிட உணர்வு உள்ள மாநிலம். இங்கு பா.ஜ.க வின் பருப்பு வேகாது, என்று பொன்னையன் குறிப்பிட்டார்.

அதிமுக பாஜக
இந்த நிலையில் பொன்னையன் கருத்துக்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்தனர். பாஜக துணை தலைவர் வி பி துரைசாமி.. பொன்னையனுக்கு எம்பி பதவி கிடைக்கவில்லை. அதனால் அவர் விரக்தியில் பேசுகிறார் என்று கூறினார். அதேபோல் பாஜக எச். ராஜா, பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. பாஜக வளர்ச்சியால் பொன்னையன் இப்படி பேசுகிறார். அவர் தான் வளரவில்லை என்ற விரக்தியில் இருக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அண்ணாமலை
பொதுவாக பாஜக தொடர்பாக அதிமுக தலைவர்கள் ஏதாவது சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் உடனே.. அதிமுக டாப் தலைகள் அதற்கு மறுப்பு தெரிவிப்பார்கள். ஒன்று அப்படி பேசிய நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்குவார்கள். அல்லது அது அவரின் சொந்த கருத்து என்று கூறுவார்கள். ஆனால் எடப்பாடி இதுவரை பொன்னையன் கருத்தை மறுக்கவில்லை. பொன்னையன் சொந்த கருத்து சொல்லி இருக்கிறார் என்று எடப்பாடி சமாதானம் செய்யவில்லை.

இரண்டு நாள் ஆச்சு
மாறாக எடப்பாடி 2 நாளாக அமைதி காத்து வருகிறார். இந்த பெருத்த அமைதிதான் பாஜகவிற்கு குழப்பத்திற்கு உள்ளாக்கி இருக்கிறதாம், எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்துதான் இப்படி பொன்னையன் பேசினாரா.. அவரின் கிரீன் சிக்னலோடுதான் பொன்னையன் இப்படி பேசினாரா., ஏன் இன்னும் எடப்பாடி எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.. என்ற குழப்பத்தில் பாஜக தரப்பு ஆழ்ந்து இருக்கிறதாம். அதாவது பொன்னையனை பேச விட்டு, அதிமுக ஆழம் பார்க்கிறது என்று கமலாலய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

பாஜக வளர்ச்சி
பாஜகவின் திடீர் வளர்ச்சியை அதிமுக தங்களின் இருப்பிற்கு வந்த ஆபத்தாக பார்க்கிறது. இதன் காரணமாக அதிமுக இப்படி பொன்னையனை விட்டு பேச தொடங்கி உள்ளது. பாஜக வளர்ந்து கொண்டே செல்வதை அதிமுக கண்டிப்பாக விரும்பாது. அதனால் பொன்னையன் முதல் ஆளாக பேசி உள்ளார். பொன்னையனா ஐடி விங் கூட்டத்தில் இப்படி பேசுகிறார் என்றால் அது கண்டிப்பாக இரட்டை தலைமையின் கிரீன் சிக்னல் இல்லாமல் நடந்து இருக்காது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஆழம்
அடுத்து இதில் எடப்பாடி இரண்டு முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்போதும் போல இது பொன்னையன் கருத்து. அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறி எடப்பாடி பிரச்னையை தீர்க்க வாய்ப்பு உள்ளது. இதனால் பாஜக - அதிமுக இடையிலான உறவு தொடர்ந்து சுமுகமாக இருக்கும். அல்லது எடப்பாடி எதுவும் சொல்லாமல் அப்படியே அமைதி காத்து பாஜகவை அலற விட வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்... எடப்பாடி என்ன செய்வார் என்று பார்க்கலாம்!
-
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications