கோவை, திருப்பூருக்கு சட்டவிரோதமாக படையெடுக்கும் வங்கதேசத்தினர்.. ஆக்சனில் இறங்கிய போலீஸ்
கோவை: வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழையும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அன்னூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 11 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த வேகமாக முன்னேறும் மாவட்டமாக கோவை உள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனற பெயர் பெற்ற கோவை தொழில்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி கொண்டிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பெரு உற்பத்தி நிறவனங்கள் இயங்கி வருகின்றன.

வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக
இதேபோல திருப்பூர் மாவட்டம் பின்னலாடை உற்பத்தியில் முதன்மையாக உள்ளது. இந்த 2 மாவட்டங்களிலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பணியாற்றி வருகிறார்கள். மேலும் நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் வந்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தனியார் நூற்பாலைகள், பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகிறார்கள். இதில் வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அங்கு வங்கதேசம் நாட்டைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக கோவை கியூ பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னணியில் ஏஜென்ட்கள்
தகவல் அறிந்த கியூ பிரிவினர், அன்னூர் காவல்துறையினருடன் இணைந்து அந்தப் பகுதியில் உள்ள நிறுவனங்களில் சோதனை நடத்தினர். தொழிலாளிகள் தங்கியிருந்த அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஏராளமான ஆவணங்களை சோதனை செய்யப்பட்டது. அப்போது எந்தவித ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் கண்டறியப்பட்டனர்.
காவல் துறையினர் அவர்கள் 11 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் அவர்கள் அன்னூர் பகுதியில் உள்ள தனியார் ஆலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர். வங்கதேசம் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக வந்துள்ளனர். கடந்த வாரம் அவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். ஏஜென்ட்கள் மூலமாக அவர்கள் அழைத்து வரப்பட்டது தெரியவந்துள்ளது.
முகாமில் ஒப்படைப்பு
இதன் பின்னணியில் உள்ள ஏஜென்ட்கள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த 11 பேர் சேலத்தில் உள்ள வங்கதேச அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேபோல கடந்த வாரம் திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தனர். அடுத்தடுத்த கைதுகளால் கொங்கு மண்டலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கோவையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் எடுத்த முடிவு.. மாவட்ட கலெக்டருக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் -
இந்தியா முழுக்க பேசுபொருளான கோவை பஸ்.. கர்நாடகாவில் உண்மையில் என்ன நடந்தது.. போலீசார் வார்னிங் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications