என்னாது புடவைக்கு கெட்அவுட்டா.. ட்விட்டரில் முறையிட்ட பெண்.. மன்னிப்பு கேட்ட டெல்லி ஓட்டல் நிர்வாகம்
டெல்லி: டெல்லியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் உள்ள ஹோட்டலில் இந்திய உடை அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு எழுந்தது. இதையடுத்து அந்த பெண்ணை ஹோட்டல் நிர்வாகம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தது.
Recommended Video
டெல்லியில் குருகிராமைச் சேர்ந்த ஒரு பள்ளியின் முதல்வர் சங்கீதா கே நாயக். இவர் வசந்த் கஞ்சில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கிளின் மற்றும் லிவி ஹோட்டலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்றிருந்தார்.
அப்போது அவர் இந்திய பாரம்பரிய உடையான புடவை அணிந்து சென்றதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது போன்ற உடையை அணிந்து வருபவர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை என கூறியதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து வீடியோவுடன் சங்கீதா தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் வசந்த் கஞ்சில் உள்ள கிளின்- லிவி ஹோட்டலில் ஒரு பாகுபாட்டை நான் சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய உடை அணிந்தவர்கள் அனுமதிக்கப்படாததால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் அனைத்து விதமான கேஸுவல் உடைகளும் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் பாரம்பரிய உடைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நாம் இந்தியர் என கூறிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.
@bishnoikuldeep My shocking experience with discrimination at Kylin and Ivy, Ambience Vasant Kunj this evening. Denied entry as ethnic wear is not allowed! A restaurant in India allows ‘smart casuals’ but not Indian wear! Whatever happened to pride in being Indian? Take a stand! pic.twitter.com/ZtJJ1Lfq38
— Sangeeta K Nag (@sangeetaknag) March 10, 2020
இந்த வீடியோ 10-ஆம் தேதி வைரலானதுவுடன் அதை ஆயிரக்கணக்கானோர் பார்த்தனர். அவர்கள் சங்கீதாவுக்கு ஆதரவாக பதிலளித்தனர். இதையடுத்து கிளின் மற்றும் லிவி ஹோட்டலின் இயக்குநர் சவுரவ் கனிஜோ மன்னிப்பு கேட்டுள்ளார். தனது ஹோட்டல் ஊழியரின் செயலுக்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து மன்னிப்பு கேட்டதற்கு சவுரவுக்கு சங்கீதா நன்றி தெரிவித்துள்ளார்.