கொரோனா 3வது அலையில் இந்தியாவில் உயிரிழப்புகள் குறைவு.. காரணம் என்ன தெரியுமா? வி.கே.பால் விளக்கம்
டெல்லி: கொரோனா மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் குறைந்துவருவதற்கு தடுப்பூசி தான் காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகமெங்கும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. புத்தாண்டுக்கு முன் கொரோனாவின் எண்ணிக்கை 5%க்கும் கீழ் இருந்தது. இந்நிலையில் புத்தாண்டுக்குப் பின் கொரோனாவின் தினசரி பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள உலகமெங்கும் தடுப்பூசி பயன்பாடு அதிகரித்தது. இதனால் இந்த மூன்றாவது அலையில் பாதிப்புகள் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையில், உயிரிழப்புகளைத் தடுத்து பாதிப்புகளைக் குறைத்திருக்கிறது தடுப்பூசி. இந்தியா முழுதும் தடுப்பூசி செலுத்துக்கொண்ட காரணத்தால் உயிரிழப்புகள் பெருவாரியாக குறைந்துள்ளதாக நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று வரை 3.17 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் 28,000-த்தை கடந்து அதிகரித்துள்ளது. இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி
நிதிஆயோக் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், '' இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருகிறது. மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதால், கொரோனாவில் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நூறு கோடி தடுப்பூசி என்ற சாதனையை செய்துள்ளோம்.

அலட்சியம் கூடாது
இன்னும் 6.50 கோடி மக்கள் 2-வது டோஸ்தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். கொரோனாவால் உயிரிழப்பு குறைந்துவிட்டது என அலட்சியமாக இருக்கக்கூடாது. கொரோனாவுக்கு எதிரான போரை விட்டுவிடக்கூடாது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு'' என்று தெரிவித்தார்.
Recommended Video

குழந்தைகள்
கடந்த 2020ம் ஆண்டு கொரோனாவில் உயிரிழந்த 10 சதவீதம் பேரில், 0.96 சதவீதம் மட்டுமே 0 முதல் 19வயதுள்ளவர்கள். 2021ல் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 11 சதவீதம் பேரில் 0.70 சதவீதம் பேர் மட்டுமே 19 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உயிரிழந்தனர். இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தெரிவித்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications