கொரோனா 3வது அலையில் இந்தியாவில் உயிரிழப்புகள் குறைவு.. காரணம் என்ன தெரியுமா? வி.கே.பால் விளக்கம்
டெல்லி: கொரோனா மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் குறைந்துவருவதற்கு தடுப்பூசி தான் காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகமெங்கும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. புத்தாண்டுக்கு முன் கொரோனாவின் எண்ணிக்கை 5%க்கும் கீழ் இருந்தது. இந்நிலையில் புத்தாண்டுக்குப் பின் கொரோனாவின் தினசரி பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள உலகமெங்கும் தடுப்பூசி பயன்பாடு அதிகரித்தது. இதனால் இந்த மூன்றாவது அலையில் பாதிப்புகள் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையில், உயிரிழப்புகளைத் தடுத்து பாதிப்புகளைக் குறைத்திருக்கிறது தடுப்பூசி. இந்தியா முழுதும் தடுப்பூசி செலுத்துக்கொண்ட காரணத்தால் உயிரிழப்புகள் பெருவாரியாக குறைந்துள்ளதாக நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று வரை 3.17 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் 28,000-த்தை கடந்து அதிகரித்துள்ளது. இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி
நிதிஆயோக் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், '' இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருகிறது. மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதால், கொரோனாவில் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நூறு கோடி தடுப்பூசி என்ற சாதனையை செய்துள்ளோம்.

அலட்சியம் கூடாது
இன்னும் 6.50 கோடி மக்கள் 2-வது டோஸ்தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். கொரோனாவால் உயிரிழப்பு குறைந்துவிட்டது என அலட்சியமாக இருக்கக்கூடாது. கொரோனாவுக்கு எதிரான போரை விட்டுவிடக்கூடாது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு'' என்று தெரிவித்தார்.
Recommended Video

குழந்தைகள்
கடந்த 2020ம் ஆண்டு கொரோனாவில் உயிரிழந்த 10 சதவீதம் பேரில், 0.96 சதவீதம் மட்டுமே 0 முதல் 19வயதுள்ளவர்கள். 2021ல் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 11 சதவீதம் பேரில் 0.70 சதவீதம் பேர் மட்டுமே 19 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உயிரிழந்தனர். இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தெரிவித்தனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications