டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹாட்ஸ்பாட்கள்தான் முக்கியம்.. கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்போம்.. பிரதமர் மோடியின் அதிரடி திட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் ஹாட்ஸ்பாட்களில் அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Nationwide lockdown extended till May 3, Modi says

    இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று மக்கள் முன்னிலையில் உரையாற்றிய போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், 21 நாள் ஊரடங்கு இன்று நிறைவடையும் நிலையில், அது மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவே இணைந்து இந்த வைரஸுக்கு எதிராக போராடி வருகிறது.

    உங்களுடைய ஒத்துழைப்பு நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவியிருக்கிறது. உங்கள் தியாகங்களை நான் பெரிதும் மதிக்கிறேன். உங்களுடைய பிரச்சினைகளை நான் புரிந்து கொண்டிருக்கிறேன், என்றார்.

    இந்தியா ஹாட்ஸ்பாட்

    இந்தியா ஹாட்ஸ்பாட்

    மேலும், இந்தியாவில் கொரோனா அனைத்து இடங்களிலும், அனைத்து வகையிலும் ஒழிக்கப்பட வேண்டும். ஒரே ஒரு நபர் இந்தியாவில் பலியானால் கூட அதை நாம் பெரிய விஷயமாக பார்க்க வேண்டும். அதை மிக கவனமாக பார்க்கக் வேண்டும். இதனால்தான் கொரோனா அதிகமாக பரவும் ஹாட்ஸ்பாட் பகுதிகளை அதிகம் கவனிக்க உத்தரவிட்டு உள்ளேன்.

     கடுமையான கட்டுப்பாடு

    கடுமையான கட்டுப்பாடு

    ஹாஸ்பாட் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.அங்குதான் கொரோனா தீவிரமாக பார்வை வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் புதிதாக ஹாட்ஸ்பாட் பகுதிகள் உருவாகும். இதை தடுப்பதுதான் எங்கள் நோக்கம். ஹாஸ்பாட் பகுதிகள் உருவாகாமல் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் ஆகவும். ஆனால் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும்

    கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும்

    அங்கு கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும். கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். புதிதாக எங்காவது ஹாஸ்பாட் பகுதிகள் தோன்றினால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். ஏப்ரல் 20 வரை இது கண்காணிக்கப்படும். அனைத்து மாவட்டங்கள், வட்டங்கள், மாநிலங்கள் எல்லாம் தீவிரமாக கண்காணிக்கப்படும். அங்கு எப்படி விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கண்காணிக்கப்படும்.

    தீவிரம் அடைய கூடாது

    தீவிரம் அடைய கூடாது

    இந்த இடங்களில் கொரோனா தீவிரம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நடந்தால் அங்கு விதிகள் தளர்த்தப்படும். ஊரடங்கு கொஞ்சம் தளர்த்தப்படும். ஆனால் அதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஆனால் எப்போதும் போல ஹாட்ஸ்பாட்களில் தீவிரமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்த அரசு ஹாஸ்பாட் பகுதிகள் மீது தீவிர கவனம் செலுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    English summary
    Coronavirus: We will focus on Hotspots in all over India says PM Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X