இனி யூஸ் அன்ட் த்ரோ கப்புகளுக்கு நோ சொல்லுங்க! ஜூலை 1 முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக்கிற்கு தடை
டெல்லி: நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் பாலிஸ்டிரின் மற்றும் எக்ஸ்பேண்ட் பாலிஸ்டிரீன் உள்ளிட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம், இறக்குமதி, விற்பனை உள்ளிட்டவைகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகள் உடல்நலனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் வாயில்லா ஜீவராசிகளுக்கும் கேடை விளைவிக்கும். இது மண்ணில் புதைந்தால் தாவரங்களுக்கும் நிலத்தடி நீருக்கும் கடும் பாதிப்பை தருகின்றன.

பிளாஸ்டிக் தடை
எனவே இந்த பிளாஸ்டிக்கை தடை செய்ய மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கவர்களை மறுசுழற்சி செய்ய முடியாது. இது போன்ற கவர்கள் குப்பைகளில் மட்கி பல ஆண்டுகளாக தேக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை
இந்த நிலையில் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அது போல் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் வரும் 1 ஆம்தேதி முதல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாடு
இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் இருக்கிறதா என்பதை கண்காணிக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்களை ஏற்படுத்தவுள்ளன.

பிளாஸ்டிக் குச்சிகள்
பலூன்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் குச்சிகளால் செய்யப்பட்ட காது குடையும் பஞ்சு, ஐஸ்கிரீம் குச்சிகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் கிளாஸ்கள், 100 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், ஃபோர்க் ஸ்பூன்கள், பிளாஸ்டிக் கத்திகள், ஜூஸ் உறிஞ்சும் ஸ்டிராக்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications