Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைநகரை முடக்கிய கொரோனா.. 750 டாக்டர்களுக்கு பாதிப்பு.. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகம் முழுவதையும் ஆட்டிபடைத்து வரும் ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவையும் ஆட்டிபடைத்து வருகிறது. ஓமிக்ரான் காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,50,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதியானது.

Recommended Video

    Omicron 5 New Symptoms | AIIMS Delhi | Oneindia Tamil

    தலைநகர் டெல்லியை ஓமிக்ரான் வைரசும், கொரோனாவும் சேர்ந்து போட்டு தாக்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20,181 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் பொதுமக்கள் மட்டுமில்லாமல் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும் கொரோனா குறிவைத்து தாக்கி வருகிறது.

    750 டாக்டர்களுக்கு கொரோனா

    750 டாக்டர்களுக்கு கொரோனா

    டெல்லியில் உள்ள 6 பெரிய மருத்துவமனைகளில் இருந்து 750 மருத்துவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் லேசான அறிகுறிகளை கொண்டுள்ளனர் என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    டாக்டர்கள் பற்றாக்குறை

    டாக்டர்கள் பற்றாக்குறை

    ஆனால் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவமனைகளில் நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் பற்றாக்குறை நிலை உள்ளது. இதேபோல் டெல்லி எய்ம்ஸ்(AIIMS) மருத்துவமனையிலும் கொரோனவால் பாதிக்கப்பட்ட 350 ரெசிடென்ட் டாக்டர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    'சமாளித்து வருகிறோம்'

    'சமாளித்து வருகிறோம்'

    இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த டாக்டர் ஒருவர் கூறுகையில், ' எய்ம்ஸ் மருத்துவமனையில் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தடை ஏதும் வந்து விடக்கூடாது என்பதற்காக இருக்கக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்களை வைத்து நிலைமையை சமாளித்து வருகிறோம்' என்று கூறினார்.

    வெளிநோயாளிகள் பிரிவு மூடல்

    வெளிநோயாளிகள் பிரிவு மூடல்

    கடந்த 24 மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எய்ம்ஸில் பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.டெல்லி அரசு மருத்துவமனையான லோக் நாயக்கில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக வெளிநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதேபோல் டெல்லியில் மத்திய அரசால் நடத்தப்படும் ஆர்எம்எல் மருத்துவமனையில், 90 மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+