Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நபிகள் விவகாரம்-பாஜக மாஜி நிர்வாகி நுபுர் சர்மாவால் நாடு எரிகிறது- மன்னிப்பு கேளுங்க- உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நபிகள் நாயகம் குறித்த பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் அவதூறு கருத்தால் இந்த நாடே பற்றி எரிகிறது; நுபுர் சர்மாவின் அவதூறு கருத்தால்தான் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்; நுபுர் சர்மா தமது அவதூறு பேச்சுகளுக்காக டிவியில் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    Nupur Sharma, Delhi Police-ஐ விளாசும் Supreme Court | Udaipur Tailor *India

    இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா அவதூறாக பேசியது சர்வதேச விவகாரமானது. இதனையடுத்து பாஜகவில் இருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நுபுர் சர்மாவை கைது செய்யக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பல இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்தன.

    உதய்பூர் படுகொலை

    உதய்பூர் படுகொலை

    நுபுர் சர்மாவை ஆதரித்து கருத்துகளை பதிவிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் டெய்லர், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் தம் மீதான அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார் நுபுர் சர்மா. அதில் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நுபுர் சர்மா தெரிவித்திருந்தார்.

    நாடு பற்றி எரிகிறது- உச்சநீதிமன்றம்

    நாடு பற்றி எரிகிறது- உச்சநீதிமன்றம்

    நுபுர் சர்மாவின் மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள்: நுபுர் சர்மாவின் தேவையில்லாத உளறல்களால் நாடு இப்போது பற்றி எரிகிறது. நாட்டின் அசாதாரண நிலைக்கு நுபுர் சர்மாதான் காரணம். மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் நுபுர் சர்மா கருத்துகளை தெரிவித்துள்ளார். இரு பிரிவினருக்கு இடையே மோதல்களை தூண்டும் வகையில் நுபுர் சர்மா பேசியுள்ளார்.

    உதய்பூர் படுகொலைக்கு பொறுப்பு

    உதய்பூர் படுகொலைக்கு பொறுப்பு

    நுபுர் சர்மா தமது உயிருக்கு ஆபத்து என கூறியிருக்கிறார். நுபுர் சர்மாவின் பேச்சால் தேசப் பாதுகாப்புக்கு இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உதய்பூரில் டெய்லர் படுகொலைக்கு காரணமே நுபுர் சர்மாவின் பேச்சுதான். நாட்டில் நடைபெற்று வரும் தற்போதைய சம்பவங்களுக்கு நுபுர் சர்மா என்ற தனிநபர் மட்டுமே பொறுப்பு.

    அதிகார மமதை- மன்னிப்பு கேளுங்க

    அதிகார மமதை- மன்னிப்பு கேளுங்க

    ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பவர் இத்தகைய கருத்துகளை தெரிவித்திருக்கக் கூடாது. சில நேரங்களில் அதிகாரம் தலைக்கு ஏறிவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கிறார்கள். நுபுர் சர்மா மன்னிப்பு கேட்பது, தமது கருத்துகளை வாபஸ் பெறுவது என்பது எல்லாம் காலம் கடந்த பின்னரானது. நுபுர் சர்மா மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நுபுர் சர்மாவை ஏன் போலீசார் கைது செய்யாமல் இருக்கின்றனர். நுபுர் சர்மா டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+