கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி பாதையாத்திரை...அக்.2ல் தொடங்கும் சோனியா அறிவிப்பு
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் பாதயாத்திரை செல்கிறார் ராகுல்காந்தி. லோக்சபா தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகிறார் ராகுல்காந்தி
டெல்லி: லோக்சபா தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் முழு வீச்சில் களமிறங்குகிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் பாதையாத்திரை சென்று மக்களை நேரில் சந்திக்கப்போகிறார். அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று பேரணி தொடங்கும் என்று சோனியாகாந்தி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி 2005ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தது. பாஜக நிகழ்த்திய மாயாஜாலம்... மோடி ஆதரவு அலை காரணமாக 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது.
2014 தேர்தலில் இருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது காங்கிரஸ் கட்சி. மத்தியில் மட்டுமல்ல பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆளுங்கட்சியாக இல்லை ஏன் எதிர்கட்சியாகக் கூட இல்லை. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலிலும் பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை பறி கொடுத்தது காங்கிரஸ் கட்சி.
.

2024 லோக்சபா தேர்தல்
வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெறும் காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் அடுத்த லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அக்கட்சி தலைவர் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தி உள்ளார்.

கட்சிக்கு புத்துயிர் ஊட்ட மாநாடு
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கும், தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ள கட்சிக்கு புத்துயிரூட்டவும் ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் காங்கிரஸ் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாட்டினை 'நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்' என்ற பெயரில் நடத்தி வருகிறது.

ஆளும் கட்சிக்கு எதிரான போராட்டங்கள்
கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்த அமர்வில் கட்சி பொதுச்செயலாளர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு மாநில சட்டசபை காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டின் 2வது நாளான நேற்று, பெருகி வரும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மத்திய அரசின் தவறான கொள்கைகள் குறித்து அடுத்த கட்ட போராட்டம் நடத்தி மக்களிடம் எடுத்துச்செல்வதற்கான வழிவகைகள் குறித்து ஆராயும் முக்கிய அமர்வு நடந்தது

ராகுல்காந்தி பாதையாத்திரை
இந்த நிலையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாடு முழுவதும் பேரணி நடத்தப்படும் என்று சோனியாகாந்தி அறிவித்துள்ளார். அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளில் இந்த பேரணி தொடங்க உள்ளது. ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று சோனியாகாந்தி அழைப்பு விடுத்துள்ளார். லோக்சபா தேர்தலுக்குப் முன்பாக கட்சியை பலப்படுத்த முழுவீச்சில் களமிறங்குகிறார் ராகுல்காந்தி

பிரதமர் வேட்பாளர் யார்
கடந்த 2014,2019 தேர்தலின் போது பாஜக தனது பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. வரும் 2024 ஆம் லோக்சபா தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி முன்னிறுத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒன்றிணையுமா எதிர்கட்சிகள்
பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று கருத்துக்கள் எழுந்துள்ளன. எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கடந்த சில ஆண்டுகாலமாகவே முயற்சி செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்கட்சியினர் ஒன்றிணைவார்களா? ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications